==பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...==
==பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...==
[[ചിത്രം:21302-hv01.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-hv01.jpg|thumb|200px]]
எங்களது குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களது தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதனை வெளிக் கொணர்ந்து, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம். பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று நாங்கள் விசாரிப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த செயல்பாடு நல்ல முறையில் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது.
வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளைத் திட்டமிட இப்பயணம் பெரிதும் உதவுகிறது. பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது.
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61 [1] முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.
2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போதைய எம்.எல்.எ அச்சுதன் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது. மேலும் அறிய
துவக்கப்பள்ளி
சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இனியும் வாசிக்கலாம்
குழந்தைகளின் எண்ணிக்கை 2021-22
வகுப்புகள்
மாணவர்கள்
மாணவிகள்
மொத்தம்
முன் துவக்கப்பள்ளி
32
56
88
1
25
52
75
2
37
42
89
3
34
60
81
4
45
83
128
மொத்தம்
173
293
466
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.
இனியும் வாசிப்போம்
பைலட் பள்ளிக்கூடம்
சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட்[2]பள்ளி ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு 10 மடிக்கணினியும், 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் வகுப்புச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.
முதன்மை சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்
நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது.
கூடுதல் விபரங்கள்
கருணை நிறைந்த குழந்தை உள்ளம்
கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன் தொடக்கப் பள்ளியில் பயிலும் ரஞ்சன் எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர்.
குழந்தைகளுக்கு கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்)
சித்தூர் ஜி.வி.எல்.பி.பள்ளியில் சொந்தமாக கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லாத குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பை உறுதிப்படுத்த கைபேசி விநியோகம் செய்யப்பட்டது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் சேர்ந்து இந்நற்செயலை நிறைவேற்றினர். ஸ்மார்ட்ஃபோன் பெற்ற மாணவர்களது டிஜிட்டல் வகுப்புகளுக்கும் ஆன்லைன் படிப்புக்கும் பெரிதும் துணைபுரிகிறது. கூடுதல் அறிவதற்கு
பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்
பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...
வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளைத் திட்டமிட இப்பயணம் பெரிதும் உதவுகிறது. பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது.
எதிர்காலத்தின் மாதிரி மாணவர்கள்
அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
தலைமை ஆசிரியர்கள்
பெருமைமிகு சம்பவங்கள் நிறைந்த GVLP பள்ளியை வழிந டத்த ஒவ்வொரு முறையும் திறமை மிக்க தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். தற்போதும் இருந்து வருகின்றனர். இப்பள்ளியின் மகிமை அறிந்து பணியாற்றுவதில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள். சமையல் செய்பவர் முதற்கொண்டு அனைத்து பணியாட்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அனைவரும் ஒரு குடும்பமாக (ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்) இங்கு வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. மேலும் வாசிப்போம்
பள்ளியின் கற்றல் கற்றல் சார்ந்த செயல்பாடுகளை காட்சிப்படுத்தவும் அவற்றைப் பாதுகாக்கவும் செய்வதற்காக எங்களது பள்ளி ஒரு வலைப்பதிவைத் தொடங்கியுள்ளது. எங்கள் வலைப்பதிவைப் பார்வையிட இங்கே தொடவும். ஜி.வி எல்.பி.எஸ் வலைப்பதிவு
எங்களது யூ டியூப் சேனல்
ஜி.வி.எல்.பி.எஸ் பள்ளியின் செயல்பாடுகளை மெருகூட்ட யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பள்ளியின் செயல்பாடுகளை மக்கள் பார்த்து ரசிக்கும் தளமாக யூ டியூப் சேனல் செயல்படுகிறது. எங்கள் விக்டோரியா ஜி.எல்.பி.எஸ் யூ டியூப் சேனலைக் கண்டு மகிழ இங்கே தொடவும். விக்டோரியா ஜி.எல்.பி.எஸ்
வழிகாட்டி
பள்ளியை வந்தடைவதற்கான வழிகள்
பாலக்காடு கோட்டமைதானத்திலிருந்து மணப்புள்ளிக்காவு வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையவும்.
காடாங்கோடு சந்திப்பில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து கல்லிங்கல், கொடும்பு, பொல்புள்ளி வழியாக சித்தூர் அணிக்கோடு சந்திப்பை அடையவும்.
அணிக்கோடு சந்திப்பு பாலக்காட்டிலிருந்து சுமார் 18.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அணிக்கோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் தபால் நிலையம் (போஸ்ட் ஆபீஸ்) சாலை வழியாக 100 மீட்டர் சென்றால் வலதுபக்கம் காணப்படும் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் பின்புறம் எங்கள் ஜி.வி.எல்.பி.எஸ் சித்தூர் அமைந்துள்ளது.