ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
வசதிகள் செயல்பாடுகள் குழுக்கள் வரலாறு அங்கீகாரங்கள்
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம், சித்தூர்
വിലാസം
சித்தூர்

சித்தூர்
,
சித்தூர் പി.ഒ.
,
678101
സ്ഥാപിതം1930
വിവരങ്ങൾ
ഫോൺ04923 221095
ഇമെയിൽgvlpschittur@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21302 (സമേതം)
യുഡൈസ് കോഡ്32060400102
വിക്കിഡാറ്റQ64689876
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
ഉപജില്ല சித்தூர்
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംஆலத்தூர்
നിയമസഭാമണ്ഡലംசித்தூர்
താലൂക്ക്சித்தூர்
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംசித்தூர் தத்தமங்கலம் நகரசபை
വാർഡ്17
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ ഭരണ വിഭാഗംஅரசாங்கம்
സ്കൂൾ വിഭാഗംபொதுக் கல்வி
പഠന വിഭാഗങ്ങൾ
എൽ.പി
സ്കൂൾ തലം1 முதல் 4 வரை
മാദ്ധ്യമംதமிழ், மலையாளம்
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ141
പെൺകുട്ടികൾ237
ആകെ വിദ്യാർത്ഥികൾ378
അദ്ധ്യാപകർ12
സ്കൂൾ നേതൃത്വം
പ്രധാന അദ്ധ്യാപികஜயலக்ஷ்மி. T
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്சாமிநாதன். K
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്பினி வி. பி
അവസാനം തിരുത്തിയത്
24-01-202221302


പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ



சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61 [1] முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.

முன் துவக்கப்பள்ளி

2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போதைய எம்.எல்.எ அச்சுதன் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது.

துவக்கப்பள்ளி

சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

குழந்தைகளின் எண்ணிக்கை 2021-22

வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 32 56 88
1 25 52 75
2 37 42 89
3 34 60 81
4 45 83 128
மொத்தம் 173 293 466

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.

பைலட் பள்ளிக்கூடம்

சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட் ஸ்கூல் ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு 10 மடிக்கணினியும், 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் வகுப்புச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.

முதன்மை சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது.


தலைமை ஆசிரியை

எங்களுடைய இந்த சிறிய ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியக்கூடிய ஒவ்வொருவரும் இப்பள்ளிக்கூடத்தை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். இதன் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இதன் சிறப்புக்கு முன்னாள் மாணவர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் ஆசிர்வாதம் உறுதுணையாகிறது. இங்கு பணிபுரிகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் அனுபவித்து அறிய முடிகின்றது. ஒவ்வொரு வருடமும் கலை, விளையாட்டு, கைவண்ணம், அறிவியல், கணித துறைகளில் நாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் நமது ஜி.வி.எல்.பி மண்ணின் பெருமையை எடுத்துரைக்கின்றது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உணவு சமைப்பவர் முதல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரை ஒரே குடும்பம் போலவே நாங்கள் உற வாடுகின்றோம். இதுதான் எங்களது வெற்றிக்கு காரணம். ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பத்திலுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பரிபூரணமான சேவையை செய்து வருகின்றோம். இடர்கள் எத்தனை வரினும் சித்தூர் தாலுக்காவிலுள்ள மிகச்சிறந்த ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடமாக திகழ்கின்றது எங்களுடைய அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.

கருணை நிறைந்த குழந்தை உள்ளம்

கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன் தொடக்கப் பள்ளியில் பயிலும் ரஞ்சன் எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர்.

எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்

நான் தான் வைகப்பிரபா. க.அ

எங்கள்பள்ளி மேதைகளுடன்...!

பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...

எங்களது குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களது தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதனை வெளிக் கொணர்ந்து, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம். பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று நாங்கள் விசாரிப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த செயல்பாடு நல்ல முறையில் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது.

எதிர்காலத்தின் மாதிரி மாணவர்கள்

அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

முந்தைய தலைமை ஆசிரியர்கள்

வரிசை எண முன்தலைமை ஆசிரியர்கள் வருடம்
1 வி.ராஜன் - 2001
2 டி.சி. தாமஸ் 2001 - 2005
3 ஷம்சத் பேகம் 2005 - 2006
4 க.ப.விஜயகுமாரி 2006 - 2007
5 ஜி.அம்பிகா 2007 - 2009
6 நளினி சி.ஐ 2009 - 2016
7 ஷைலஜா. ந. கு 2016 - 2021

பிரபலமான முன்னாள் மாணவர்கள்

வரிசை எண் முன்னாள் மாணவர்கள்
1 பி.லீலா (பாடகி)
2 சாந்தா தனஞ்செயன் (பிரபல பரத நாட்டியக் கலைஞர்)
3 ஜான்பால் (பிரபல திரைக்கதை எழுத்தாளர்)
4 ராதா லட்சுமி பத்மராஜன் (பிரபல எழுத்தாளர் திரு பத்மராஜன் அவர்களுடைய மனைவி)
5 மானசி பாய் (முன் Additional DPI)
6 ஹரிசாத்ந் சரண் (நடிகர்)
7 டாக்டர் லதா வர்மா
8 கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி)

படைப்புகள்-குழந்தைகளுடையவும், ஆசிரியர்களுடையவும்

* குழந்தைகள்

* ஆசிரியர்கள்

பள்ளிக்கு ஒரு வலைப்பதிவு

பள்ளியின் கற்றல் கற்றல் சார்ந்த செயல்பாடுகளை காட்சிப்படுத்தவும் அவற்றைப் பாதுகாக்கவும் செய்வதற்காக எங்களது பள்ளி ஒரு வலைப்பதிவைத் தொடங்கியுள்ளது. எங்கள் வலைப்பதிவைப் பார்வையிட இங்கே தொடவும். ஜி.வி எல்.பி.எஸ் வலைப்பதிவு

எங்களது யூ டியூப் சேனல்

ஜி.வி.எல்.பி.எஸ் பள்ளியின் செயல்பாடுகளை மெருகூட்ட யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பள்ளியின் செயல்பாடுகளை மக்கள் பார்த்து ரசிக்கும் தளமாக யூ டியூப் சேனல் செயல்படுகிறது. எங்கள் விக்டோரியா ஜி.எல்.பி.எஸ் யூ டியூப் சேனலைக் கண்டு மகிழ இங்கே தொடவும். விக்டோரியா ஜி.எல்.பி.எஸ்

ஆவணம்

வழிகாட்டி

பள்ளியை வந்தடைவதற்கான வழிகள்

  • சித்தூர் நகரத்தின் இதயப்பகுதியான அணிக்கோட்டிலிருந்து தபால் நிலையம் சாலை வழியாக அரைக் கிலோமீட்டர் நடந்தால் வலதுபுறம் காணப்படும் அரசு விக்டோரியா பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு பின்புறத்தில் தான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

{{#multimaps: 10.699971,76.740645|zoom=13}}

  1. பள்ளி தகவல் பலகை