"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2018-19" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
No edit summary
വരി 141: വരി 141:
|}</center>
|}</center>
<font size=3>2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் திருமதி. பிரியா அவர்கள் இப்போதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் கே.பி அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அவர் ரிப்போர்ட்டும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரு. கே.பி ரஞ்சித் அவர்கள் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் திரு. சுவாமிநாதன் அவர்கள் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக திருமதி. தீபா அவர்களும் துணைத்தலைவியாக திருமதி. லக்ஷ்மி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.</font>
<font size=3>2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் திருமதி. பிரியா அவர்கள் இப்போதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் கே.பி அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அவர் ரிப்போர்ட்டும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரு. கே.பி ரஞ்சித் அவர்கள் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் திரு. சுவாமிநாதன் அவர்கள் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக திருமதி. தீபா அவர்களும் துணைத்தலைவியாக திருமதி. லக்ஷ்மி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.</font>
|-
|}
----
{|
|-
| style="background:#F0F8FF; border:4px solid #0000df; padding:1cm; margin:auto;"|
===<font size=6><u><b><center>ஆகஸ்ட்</center></b></u></font>===
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''ஹிரோஷிமா தினம்'''</font></div>
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-hiro2018 1.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-hiro2018 3.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-hiro2018 4.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-hiro2018 10.jpg|200px]]
|-
|}</center> 
<font size=3> ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நல்லமுறையில் கொண்டாடப்பட்டது. யுத்தத்தின் கொடுமைகளை குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை வகுப்பு நடத்தினார். குழந்தைகள் உருவாக்கிக் கொண்டு வந்த பிளக்கார்டுகளைப் பிடித்துக்கொண்டு, பாட்ஜ் அணிந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். '''யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம்''' என்னும் முத்திரை வாக்கியத்தை முழக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்தினர். பதிப்புகளும் படங்களும் குழந்தைகள் உருவாக்கினர். யுத்தத்தினால் ஏற்படும் கொடுமைகளை உணர்த்தும் காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. போரின் கொடுமைகள் யாவும் குழந்தைகளுடைய மனதில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.</font>
* [[{{PAGENAME}}/ஹிரோஷிமா தினம்|<font size=3>'''''பட தொகுப்பு'''''</font>]]
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''சுதந்திர தினம்'''</font></div>
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-indp1.jpg|200px]] || [[ചിത്രം:21302-indp2.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-indp3.jpg|200px]] ||  [[ചിത്രം:21302-indp11.jpg|200px]]
|-
|}</center> 
<font size=3>ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடுவது போல இவ்வருடம் கொண்டாட முடியவில்லை. கனத்த மழையானதனால் குழந்தைகள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு நல்ல முறையில் கொண்டாடினோம். நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் கொடியேற்றினார். தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் சுதந்திரதினத்தை பற்றியும் சந்திரதின நல்வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு அறிவித்தனர். குழந்தைகளுடைய தேசபக்திப் பாடல், மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்பு அனைவருக்கும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.</font>
* [[{{PAGENAME}}/சுதந்திர தினம்|<font size=3>'''''பட தொகுப்பு'''''</font>]]
|-
|}
----
{|
|-
| style="background:#F0F8FF; border:4px solid #9F000F; padding:1cm; margin:auto;"|
===<u><font size=6><b><center>செப்டம்பர்</center></b></font></u>===
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''பள்ளித் தேர்தல்'''</font></div>
<font size=3>குழந்தைகளில் ஜனாதிபத்தியத்தின் மதிப்பை வளர்ப்பதற்கும் தேர்தல் எவ்வாறு நடக்கிறது என்பதை அறியச் செய்வதற்காகவும் ஒவ்வொரு பள்ளிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கின்ற தேர்தலைவிட முற்றிலும் மாறுபட்டதாக இவ்வருட தேர்தல் நடத்தப்பட்டது. ICT ன் துணையோடு பள்ளித் தேர்தல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளிலும் வகுப்புத் தேர்தல் நடத்தப்பட்டு, வகுப்புத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4A, 4B, 4C என்னும் மூன்று வகுப்புகளிலுள்ள தலைவர்கள் நோமினேஷன் வழங்கினர். குழந்தைகளே அவர்களுக்குப் பிடித்தமான சின்னங்களைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒருவார காலஅளவு கொடுக்கப்பட்டது.</font>
'''<u><big>போட்டியாளர்கள்</big></u>'''       
{| class="wikitable"
|-
!போட்டியாளர்களின் பெயர் !! வகுப்பும் பிரிவும் !! சின்னங்கள்
|-
|  வரிஷ்ட். எஸ்|| 4 B || ஆப்பிள்
|-
| சரண்ஜித். எஸ்  || 4 A || ஸ்ட்ராபெர்ரி
|-
| ஸ்ரியா. எஸ் || 4 B || மாங்காய்
|-
| மீரா. எஸ் || 4 C || பலாப்பழம்
|-
| சிவாகினி. எஸ் || 4 C || வாழைப்பழம்
|-
| அஸ்வதி. ஜே || 4 A  || அன்னாசிப் பழம்
|}
<font size=3>செப்டம்பர் ஐந்தாம் தேதி காலை 4 பூத்துகள் 4 வகுப்புகளிலாக அமைக்கப்பட்டது. ப்ரிசைடிங் மற்றும் போளிங் அலுவலர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். சரியாக காலை 10:30 மணிக்கு தேர்தல் ஆரம்பித்தது. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கைப்பேசியில்( மொபைல்) அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அனைத்து குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எலக்ட்ரானிக் வாக்களித்தனர். கை விரலில் மை தடவியது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஒரு அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் வாக்கு ஆனதனால் வாக்கு எண்ணுதல் மிக மிக சுலபமாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவும் அதே நாள் அறிவிக்கப்பட்டது.</font>
'''<u><big>தேர்தல் முடிவு</big></u>'''
{| class="wikitable"
|-
!போட்டியாளர்களின் பெயர் !! வகுப்பும் பிரிவும் !! ஓட்டுக்களின் எண்ணிக்கை
|-
| சரண்ஜித். எஸ் || 4 A || 99
|-
| வரிஷ்ட். எஸ்|| 4 B || 86
|-
| அஸ்வதி. ஜே|| 4 A || 38
|-
| ஸ்ரியா. எஸ் || 4 B || 35
|-
| மீரா. எஸ் || 4 C || 19
|-
| சிவாகினி. எஸ் || 4 C || 13
|}
      '''சரண்ஜித் பள்ளித் தலைவராகவும் வரிஷ் பள்ளித் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டது.'''
[https://drive.google.com/open?id=1hvAmXwjJlJbzyIVAkvWuE9QzyQzg8Kj- * '''பள்ளித் தேர்தல்''']
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''உலக எழுத்தறிவு தினம்'''</font></div>
<font size=3>உலக எழுத்தறிவு தினமான செப்டம்பர் 8 ஆம் தேதி குழந்தைகளுக்கு பதிப்புகள் தயாராக்குதல், வாசிப்பு, கதை சொல்லுதல் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகுப்பினரும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுக்காக சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர். </font>   
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''வித்தியாசமான விருந்து (சத்யா)'''</font></div>
<font size=3>ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து  இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது.</font> 
* [[{{PAGENAME}}/வித்தியாசமான விருந்து|<font size=3>'''''பட தொகுப்பு'''''</font>]]
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்'''</font></div>
<font size=3>செப்டம்பர் 27ஆம் தேதி வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. வகுப்பு மதிப்பீடு (தேர்வு) ஒரு கண்ணோட்டம். குழந்தைகளுடைய தரமும் கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுடைய பிரச்சினைகள், தூய்மை, நல்ல பழக்கவழக்கங்கள், போன்றன பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டது. பெற்றோர்களிலிருந்து ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்  வீட்டுப்பாடங்களில் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம் என்றும் இக்கல்வியாண்டில் என்னென்ன செயல்பாடுகள் செய்யலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. அறிவியல் கண்காட்சி, கலைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டி போன்றவை இவ்வருடம் மாவட்ட அளவில் இல்லாததால் பள்ளியில் இப்போட்டிகளை எப்பொழுது நடத்தலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. கலைநிகழ்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.</font>
|-
|}
----
{|
|-
| style="background:#F0F8FF; border:4px solid #3b3b00; padding:1cm; margin:auto;"|
===<u><font size=6><b><center>அக்டோபர்</center></b></font></u>===
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''உலக முதியோர் தினம்'''</font></div>
<font size=3>அக்டோபர் 1 ஆம் நாள் உலக முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு அவரவரது  தாத்தா, பாட்டியை பற்றி சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களது நல்ல மனதைப் பற்றி குழந்தைகள் கூறினர். வயதான நமது தாத்தாவையும் பாட்டியையும் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமையாகும் என்ற அறிவுரை குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டது.</font>
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''காந்தி ஜெயந்தி'''</font></div>
[[ചിത്രം:21302-oct2.jpg|thumb|250px|center]]
<font size=3>ஆசிரியர்களும் குழந்தைகளும் அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாடுவதற்காக ஒன்றுகூடினர். குழந்தைகள் காந்திஜி பற்றிய கவிதைகள் பாடினர். அவர்களது பாதிப்புகளும் காண்பித்தனர். குழந்தைகளது கலைநிகழ்ச்சிகளும் மிக அருமையாக இருந்தது. காந்தி ஜெயந்தி தினமான இன்று உலகம் முழுவதும் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. காந்திஜியினுடைய வாழ்க்கை வரலாறு குழந்தைகளுக்கு ப்ரொஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட்டது. அவரைப் பற்றின ஒலி அலைகள் குழந்தைகளுக்கு கேள்விக்கப்பட்டது.</font>
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''அக்டோபர் 23'''</font></div>
<font size=3>அக்டோபர் 23ஆம் தேதி வித்யாரங்கத்தினுடைய கவிதை, கதை, நாடகம், நாட்டுப்புறப்பாடல், வரைதல் போன்ற கூட்டங்கள் (குழுக்கள்) உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டங்களுடைய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுடைய மேன்மைகள் மற்றும் திறமைகள் என்னென்ன என்பதை கண்டுபிடிக்க இது மிகச்சிறந்த செயல்பாடாக அமைந்தது.</font>
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:2px solid #00FF00;text-align:left;"><font size=5>'''அக்டோபர் 30 SRG'''</font></div>
<font size=3>நவம்பர் 1 கேரளப்பிறவி தினத்தில் குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் எப்பொழுது நடத்த வேண்டும்? எவ்வாறு நடத்த வேண்டும்? எங்கு வைத்து நடத்த வேண்டும்? என்றெல்லாம் SRG ல் தீர்மானிக்கப்பட்டது.</font>
|-
|-
|}
|}
----
----

07:25, 12 ഡിസംബർ 2019-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

2018-19 கல்வி ஆண்டின் செயல்பாடுகளும், தினக் கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா

நமது பள்ளியில் ஜூன் ஒன்றாம் நாள் நுழைவு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு எழுத்துக்களாலான கிரீடம் அணிவித்தோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு பரிசுப்பைகள் வழங்கினர். நுழைவுத் திருவிழாப் பாடல் அனைவரும் கேட்கும்படி செய்தோம். கல்வி அமைச்சரின் உறுதிமொழியை அனைவரும் கூறினோம். பள்ளிச் சீருடை மற்றும் புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்பு அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.

உலக சுற்றுப்புற தினம்

உலக சுற்றுப்புற தினமான ஜூன் 5 ஆம் நாள் சுற்றுப்புற தின உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். குழந்தைகளுடைய பதிப்புகளும் வெளியிடப்பட்டது. தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் உலக சுற்றுப்புற தினம் கொண்டாடுவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். பின்பு குழந்தைகளுடைய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தோடு தொடர்புடைய பாடல்கள், கவிதைகள், குறிப்புகள் போன்றன இடம்பெற்றன. குழந்தைகள் ப்ளக்கார்டு பிடித்துக்கொண்டும் பேட்ஜ் அணிந்து கொண்டும் சுற்றுபுற தின ஊர்வலம் நடத்தினர். கவுன்சிலர் திரு. சாமிநாதன் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுப்புற தினத்தை தொடங்கி வைத்தார்.அனைத்து குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முன்னறி சோதனை

ஜூன் 11 ஆம் தேதி வேறு பள்ளிகளிலிருந்து புதிதாக வந்து சேர்ந்த குழந்தைகளுக்கு முன்னறிவு சோதனை நடத்தப்பட்டது.


ஹலோ இங்கிலீஷ்

ஜூன் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஹலோ இங்கிலீஷ் வகுப்பு ஐந்து நாட்கள் இரண்டு மணிக்கூர் வீதம் அனைத்து வகுப்புகளிலும் நடத்தப்பட்டது.


அய்யன்காளி நினைவு தினம்

அய்யன்காளி நினைவு தினமான ஜூன் 18-ம் தேதி சமூக சீர்திருத்தவாதியான அய்யன்காளி அவர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவரது சேவைகள் பற்றியும் குழந்தைகளுக்கு அறியச் செய்தோம்.


வாசிப்பு வாரம்

ஜூன் 19 பி.என் பணிக்கரின் நினைவு நாளை வாசிப்பு தினமாக கொண்டாடினோம். வாசிப்பு தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் முன்னிலையில், குழந்தைகள் கவிதைகள், கதைகள், பி.என் பணிக்கரை பற்றின குறிப்புகள் போன்றவற்றைக் கூறினர். தலைமையாசிரியை அனைவருக்கும் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை விவரித்துக் கொடுத்தார். வகுப்பு நூலகமும், பள்ளி நூலகமும் இயன்ற அளவு பயன்படுத்தி வாசிப்புக் குறிப்பு எழுதுவதற்கு குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு வாரம் முழுவதும் வாசிப்பு வாரமாக கொண்டாடப்பட்டது. தமிழ் மற்றும் மலையாள சங்கங்களின் தொடக்கமும், முடிவும் ஒரே நாளில் நடத்தப்பட்டது.

யோகா தினம்

ஜூன் 21 ஆம் நாள் யோகா தினம் கொண்டாடப்பட்டது. திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்கள் யோகா செய்தும், மாணவர்களை செய்ய வைத்துக் கொண்டும் யோகா தினத்தைத் தொடங்கி வைத்தார். அன்று முதல் குழந்தைகளுக்கு யோகா வகுப்பு தொடங்கப்பட்டது. வாழ்க்கையில் யோகாவிற்கு உள்ள முக்கியத்துவத்தை அனைத்துக் குழந்தைகளும் புரியும் விதத்தில் எடுத்துரைத்தார்.


ஜூலை

மருத்துவர் தினம்

ஜூலை 1ஆம் நாள் மருத்துவரான பிதான் சந்திர ராய் அவர்களது பிறந்தநாளை நாம் மருத்துவர். தினமாக கொண்டாடுகின்றோம் ஆரோக்கியம் என்பது வாழ்க்கை முறையும் உட்பட்டதுதான் என்ற கருத்தினை குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீடியோ காட்சியும் காண்பிக்கப்பட்டது.


துஞ்சன் குருமடத்திற்கு ஒரு பயணம்

ஜூலை மூன்றாம் தேதி திரு. துஞ்சன் குருமடம் சென்றோம். நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த களப்பயணத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் துஞ்சன் குருமடத்தின் முக்கியத்துவத்தை அறிய முடிந்தது. அங்கே சில குழந்தைகள் ராமாயணம் வாசித்தனர்.


பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு

ஜூலை 5 ஆம் நாள் பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு என்பன நடத்தப்பட்டது.திரு. சேகரிரிபுரம் மாதவன் இந்நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்பில் பயிலும் அனஸ்தூப், அனர்கயா என்னும் குழந்தைகளின் தந்தை திரு.ஏஞ்சல் பாபு அவர்கள் வரைத்த பஷீரின் படம் வெளியிடப்பட்டது.திரு. சேகரிபுரம் மாதவன் குழந்தைகளுக்கு நாட்டுப்புறப் பாடல்களும் கவிதைகளும் பாடிக் கொடுத்தார். திருமதி. கிரிஜா அவர்களும் குழந்தைகளுக்கு நாட்டுப்புறப் பாடலை பாடிக் கொடுத்தார். குழந்தைகள் பஷீர் கதைகளான பூமியுடெ அவகாசிகள், பாத்தும்மயுடெ ஆடு போன்றவற்றிலிருந்து சில பாகங்களை மட்டும் நாடகமாக நடித்துக் காண்பித்தனர். பஷீர் கவிதைகளும் கூறினர். வாசிப்புக் குறிப்புகளும் வாசித்தனர். அனைத்து குழந்தைகளும் பதிப்புகள் தயாராக்கியிருந்தனர். ரமணன் புராணம் நாட்டிய காவியமாக நிகழ்த்தினர். தமிழ் குழந்தைகள் நாட்டுப்புற நடனம், திருக்குறள், குழுப்பாடல் போன்றவற்றை நிகழ்த்தினர்.


சந்திர தினம்

சந்திர தினமான ஜூலை 21 விடுமுறை நாளானதால் சந்திரத் தினத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் யாவும் ஜூலை 20ஆம் தேதியே நடத்தப்பட்டது. அறிவியல் இலக்கிய பரிஷத் செயலாளர் திரு. பிரசாத் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அறிவியல் சங்கத்தின் தொடக்கமும் அன்றைய நாள் நடந்தது. பிரசாத் அவர்கள் சந்திரனைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் வெளியேற்றம், வேலியிறக்கம், சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்றவற்றைப் பற்றியும் எளிமையான மொழிநடையில் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். ஜூலை 27-ஆம் தேதி நடைபெறக்கூடிய சந்திர கிரகணத்தை பார்க்க தவறாதீர்கள் என்று குழந்தைகளுக்கு நினைவூட்டினார். பின்பு குழந்தைகள் உருவாகிவந்த ராக்கெட்டின் மாதிரி காண்பிக்கப்பட்டது. குழந்தைகள் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் போன்றோரது வேடமணிந்து வந்தனர். மற்ற குழந்தைகள் அவர்களிடம் சந்திர பயணத்தின் சிறப்புக்களை கேட்டறிந்தனர். அனைத்து குழந்தைகளும் அவரவர் தயாராக்கி வந்த பதிப்புகளை வெளியிட்டனர். இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொம்மலாட்டம் நிகழ்த்தினர். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் நிலாவினுடையவும் நட்சத்திரங்களுடையவும் பாடல்கள் பாடி நடமாடினர். தமிழ் குழந்தைகள் கிரகங்களைப் பற்றிய ஒரு பாடலுக்கு நடனமாடினர். பின்பு காணொளி காண்பிக்கப்பட்டது.


திரு.எ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாள்

எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய குறிப்பு (ஒலி அலைகள்) காலை கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் கேட்கும்படி செய்தோம். ஒன்றாம் வகுப்பு மாணவர்களான அன்ஸ்தூப், அனர்கயா என்பவர்களின் தந்தை திரு. ஏய்ஞ்சல் பாபு அவர்கள் வரைந்த எ.பி.ஜே அப்துல் கலாமின் படம் வெளியிடப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாறு ICT ன் உதவியோடு அனைத்து வகுப்புகளிலும் காண்பிக்கப்பட்டது.


பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்

2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் திருமதி. பிரியா அவர்கள் இப்போதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் கே.பி அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் அவர் ரிப்போர்ட்டும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. திரு. கே.பி ரஞ்சித் அவர்கள் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் திரு. சுவாமிநாதன் அவர்கள் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக திருமதி. தீபா அவர்களும் துணைத்தலைவியாக திருமதி. லக்ஷ்மி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


ஆகஸ்ட்

ஹிரோஷிமா தினம்

ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நல்லமுறையில் கொண்டாடப்பட்டது. யுத்தத்தின் கொடுமைகளை குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திருமதி. சுப்ரபா ஆசிரியை வகுப்பு நடத்தினார். குழந்தைகள் உருவாக்கிக் கொண்டு வந்த பிளக்கார்டுகளைப் பிடித்துக்கொண்டு, பாட்ஜ் அணிந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம் என்னும் முத்திரை வாக்கியத்தை முழக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்தினர். பதிப்புகளும் படங்களும் குழந்தைகள் உருவாக்கினர். யுத்தத்தினால் ஏற்படும் கொடுமைகளை உணர்த்தும் காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. போரின் கொடுமைகள் யாவும் குழந்தைகளுடைய மனதில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.


சுதந்திர தினம்

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடுவது போல இவ்வருடம் கொண்டாட முடியவில்லை. கனத்த மழையானதனால் குழந்தைகள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு நல்ல முறையில் கொண்டாடினோம். நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் கொடியேற்றினார். தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் சுதந்திரதினத்தை பற்றியும் சந்திரதின நல்வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு அறிவித்தனர். குழந்தைகளுடைய தேசபக்திப் பாடல், மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்பு அனைவருக்கும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.


செப்டம்பர்

பள்ளித் தேர்தல்

குழந்தைகளில் ஜனாதிபத்தியத்தின் மதிப்பை வளர்ப்பதற்கும் தேர்தல் எவ்வாறு நடக்கிறது என்பதை அறியச் செய்வதற்காகவும் ஒவ்வொரு பள்ளிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கின்ற தேர்தலைவிட முற்றிலும் மாறுபட்டதாக இவ்வருட தேர்தல் நடத்தப்பட்டது. ICT ன் துணையோடு பள்ளித் தேர்தல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளிலும் வகுப்புத் தேர்தல் நடத்தப்பட்டு, வகுப்புத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4A, 4B, 4C என்னும் மூன்று வகுப்புகளிலுள்ள தலைவர்கள் நோமினேஷன் வழங்கினர். குழந்தைகளே அவர்களுக்குப் பிடித்தமான சின்னங்களைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒருவார காலஅளவு கொடுக்கப்பட்டது.

போட்டியாளர்கள்         
போட்டியாளர்களின் பெயர் வகுப்பும் பிரிவும் சின்னங்கள்
வரிஷ்ட். எஸ் 4 B ஆப்பிள்
சரண்ஜித். எஸ் 4 A ஸ்ட்ராபெர்ரி
ஸ்ரியா. எஸ் 4 B மாங்காய்
மீரா. எஸ் 4 C பலாப்பழம்
சிவாகினி. எஸ் 4 C வாழைப்பழம்
அஸ்வதி. ஜே 4 A அன்னாசிப் பழம்

செப்டம்பர் ஐந்தாம் தேதி காலை 4 பூத்துகள் 4 வகுப்புகளிலாக அமைக்கப்பட்டது. ப்ரிசைடிங் மற்றும் போளிங் அலுவலர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். சரியாக காலை 10:30 மணிக்கு தேர்தல் ஆரம்பித்தது. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கைப்பேசியில்( மொபைல்) அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அனைத்து குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எலக்ட்ரானிக் வாக்களித்தனர். கை விரலில் மை தடவியது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஒரு அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் வாக்கு ஆனதனால் வாக்கு எண்ணுதல் மிக மிக சுலபமாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவும் அதே நாள் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவு
போட்டியாளர்களின் பெயர் வகுப்பும் பிரிவும் ஓட்டுக்களின் எண்ணிக்கை
சரண்ஜித். எஸ் 4 A 99
வரிஷ்ட். எஸ் 4 B 86
அஸ்வதி. ஜே 4 A 38
ஸ்ரியா. எஸ் 4 B 35
மீரா. எஸ் 4 C 19
சிவாகினி. எஸ் 4 C 13
     சரண்ஜித் பள்ளித் தலைவராகவும் வரிஷ் பள்ளித் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டது.

* பள்ளித் தேர்தல்


உலக எழுத்தறிவு தினம்

உலக எழுத்தறிவு தினமான செப்டம்பர் 8 ஆம் தேதி குழந்தைகளுக்கு பதிப்புகள் தயாராக்குதல், வாசிப்பு, கதை சொல்லுதல் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகுப்பினரும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுக்காக சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.


வித்தியாசமான விருந்து (சத்யா)

ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது.


வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

செப்டம்பர் 27ஆம் தேதி வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. வகுப்பு மதிப்பீடு (தேர்வு) ஒரு கண்ணோட்டம். குழந்தைகளுடைய தரமும் கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுடைய பிரச்சினைகள், தூய்மை, நல்ல பழக்கவழக்கங்கள், போன்றன பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டது. பெற்றோர்களிலிருந்து ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் வீட்டுப்பாடங்களில் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம் என்றும் இக்கல்வியாண்டில் என்னென்ன செயல்பாடுகள் செய்யலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. அறிவியல் கண்காட்சி, கலைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டி போன்றவை இவ்வருடம் மாவட்ட அளவில் இல்லாததால் பள்ளியில் இப்போட்டிகளை எப்பொழுது நடத்தலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. கலைநிகழ்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.


அக்டோபர்

உலக முதியோர் தினம்

அக்டோபர் 1 ஆம் நாள் உலக முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு அவரவரது தாத்தா, பாட்டியை பற்றி சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களது நல்ல மனதைப் பற்றி குழந்தைகள் கூறினர். வயதான நமது தாத்தாவையும் பாட்டியையும் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமையாகும் என்ற அறிவுரை குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டது.


காந்தி ஜெயந்தி

ஆசிரியர்களும் குழந்தைகளும் அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாடுவதற்காக ஒன்றுகூடினர். குழந்தைகள் காந்திஜி பற்றிய கவிதைகள் பாடினர். அவர்களது பாதிப்புகளும் காண்பித்தனர். குழந்தைகளது கலைநிகழ்ச்சிகளும் மிக அருமையாக இருந்தது. காந்தி ஜெயந்தி தினமான இன்று உலகம் முழுவதும் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. காந்திஜியினுடைய வாழ்க்கை வரலாறு குழந்தைகளுக்கு ப்ரொஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட்டது. அவரைப் பற்றின ஒலி அலைகள் குழந்தைகளுக்கு கேள்விக்கப்பட்டது.

அக்டோபர் 23

அக்டோபர் 23ஆம் தேதி வித்யாரங்கத்தினுடைய கவிதை, கதை, நாடகம், நாட்டுப்புறப்பாடல், வரைதல் போன்ற கூட்டங்கள் (குழுக்கள்) உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டங்களுடைய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுடைய மேன்மைகள் மற்றும் திறமைகள் என்னென்ன என்பதை கண்டுபிடிக்க இது மிகச்சிறந்த செயல்பாடாக அமைந்தது.


அக்டோபர் 30 SRG

நவம்பர் 1 கேரளப்பிறவி தினத்தில் குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் எப்பொழுது நடத்த வேண்டும்? எவ்வாறு நடத்த வேண்டும்? எங்கு வைத்து நடத்த வேண்டும்? என்றெல்லாம் SRG ல் தீர்மானிக்கப்பட்டது.