ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/வித்யாரங்கம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
வித்யாரங்கம்

முகவுரை

வித்யாரங்கம் இலக்கியமன்றச் செயல்பாடுகள் இப்பள்ளியில் மிகவும் விமரிசையாக நடந்து வருகிறது. பாடப்புத்தகச் செயல்பாடுகளும், முக்கிய தினக்கொண்டாட்டங்களும் உட்படுத்தி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. வித்யரங்கம் செயல்பாடுகள் SRG மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் திட்டமிடப்படுவதுண்டு.

துவக்க விழா

இவ்வருட கலை இலக்கிய மன்றம் திரு.சேகரிபுரம் மாதவன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. நாட்டுப்புறப் பாடல்கள் பாடியும், கவிதைகள் சொல்லியும் உற்சாகமாகத் துவங்கி வைத்தார். நாட்டுப்புறப்பாடல் கலைஞரான திருமதி. கிரிஜா என்பவர் சிறப்பான ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பிள்ளைகளுக்குப் பாடிக் கொடுத்தார்.

நோக்கம்

  • மாணவர்களின் படைப்புத்திறன், கலைத்திறன் போன்றவற்றைத் தூண்டி வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • எல்லாக் குழந்தைகளையும் வித்யாரங்கம் இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகளில் பங்கெடுக்க வைத்தல்.
  • குழந்தைகள் திறமை, ஆர்வம் போன்றவை அதிகரிக்கிறது.

செயல்பாடுகள்

  • ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறுவர் சபை கூடுவதுண்டு.
  • கதைகள், கவிதைகள், விடுகதைகள், ஓவியம், புத்தக அறிமுகம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் அரங்கேற்றுவதுண்டு.
  • தினவிழாக்கள் தொடர்பாக பொம்மை நாடகங்கள் நடத்திக் காண்பிப்பதுண்டு.
  • செப்டம்பர் மாதம் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு கையெழுத்து பதிப்பு வெளியிடவும் செய்வர்.
  • பள்ளி அளவில் கதைக்குழு, கவிதைக் குழு, நாட்டுப்புறப்பாடல் குழு, ஓவியக் குழு, நாடகக்குழு போன்ற ஐந்து கலைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேறுபட்ட நிகழ்வுகளுக்கு துவக்கமிடப்பட்டது.
  • ஓவியம், நாட்டுப்புறப் பாடல், நாடகம் போன்றவற்றிற்கு ஒரு பணிமனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

2018- 19

  • பொம்மை நாடகம்
பொம்மை நாடகம்