ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்

எல் எஸ் எஸ் வெற்றி- 2020

எல் எஸ் எஸ் தேர்வில் வெற்றிக் கொடியை நாட்டினர் நமது பள்ளியிலுள்ள எட்டு மாணவச் செல்வங்கள். ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் எல் எஸ் எஸ் குழந்தைகளின் எண்ணிக்கையினால் நமது பள்ளி நன்மதிப்பு உடையதாக விளங்குகிறது. சித்தூர் தாலுகாவிலேயே அதிக எல் எஸ் எஸ் பெற்ற ஒரு பொதுக்கல்விக்கூடம் நமது பள்ளிக்கூடம் ஆகும். அதுமட்டுமின்றி சித்தூர் தாலுக்காவிலேயே 80 மதிப்பெண்ணிற்கு 68 மதிப்பெண்களை பெற்ற ஒரே ஒரு வெற்றியாளர் நமது பள்ளியில் பயிலும் ஸ்னிக்தா என்னும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கதாகும். பள்ளியின் தொடக்கத்தில் இருந்தே குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. திறமையுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கேற்ற செயல்பாடுகளையும், வழிகாட்டல்களையும் கொடுப்பதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. குழந்தைகளுடைய வகுப்பு பாழாகாமல் எல் எஸ் எஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சனிக்கிழமைகளிலும் குழந்தைகளுக்கு மாதிரித் தேர்வுகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களான பவில்தாஸ், ஹேமாம்பிகா போன்றோர் எல் எஸ் எஸ் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கினர். ஒவ்வொரு இடைவேளைகளிலும் குழந்தைகளுடைய கற்றல் முன்னேற்றத்தை மேன்மை படுத்துவதற்கான பகுதிகளை கண்டறிந்து குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுடைய இந்த மாபெரும் வெற்றி பள்ளிக்கூடத்திற்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. இவ்வெற்றி வரும் வருடங்களிலும் எல் எஸ் எஸ் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அனைவருக்கும் ஒரு தூண்டுதலாக அமைந்துள்ளது.

அங்கீகாரம் அமைச்சரிடமும்

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு பெருமை சேர்த்த, எல்.எஸ்.எஸ்- 2019 வெற்றியாளர்களான ஆராமிகா.கெ.ஆர், ஸ்ரியா. எஸ், சூர்யா சுனில்குமார். எஸ், வைகப்பிரபா. கே.எஸ், ஷிவானி.ஆர், சனிகா.எஸ் என்னும் ஆறு மாணவிகள் ஆகஸ்ட் 3 ஆம் நாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சரானகிருஷ்ணன் குட்டி அவர்களிடமிருந்து விருது பெற்றனர். எல்.எஸ்.எஸ் தேர்வில் தங்களது திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு எங்கள் அனைவரது பாராட்டுக்கள்...


பிரதிபோல்ஸவம் 2019- 20

ஆகஸ்ட் 3 ஆம் நாள் கே.எஸ்.டி.எ என்னும் ஆசிரியர் சங்கம் நடத்திய துணைமாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த நமது பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கின்ற நிரஞ்சன்.எம் என்னும் மாணவன் விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.



அக்ஷரமுற்றம்-2019, துணை மாவட்ட வினாடி வினாப் போட்டி- இரட்டை வெற்றி

2019- ஆம் ஆண்டின் அக்ஷரமுற்றம் துணை மாவட்ட அளவிலான வினாடி வினாப் போட்டியில் நமது பள்ளியிலிருந்து இரண்டு குழந்தைகள் பங்கேற்றனர். நிரஞ்சன்.எம் எனும் மாணவன் முதலிடத்தையும், ரிது எனும் மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மிகநல்ல முறையில் இவ்விரு குழந்தைகளும் பங்கேற்றனர் அக்டோபர் 12 சனிக்கிழமை ஜி.பி.யு.பி.எஸ் தத்தமங்கலத்தில் வைத்து நடைபெற்ற இப்போட்டியில் 82ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இதில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர் நமது குழந்தைகள். வெற்றியாளர்களுக்குக் கிடைத்த விருதுகளும், சான்றிதழ்களும் மற்றுள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. முதலிடத்தைப் பெற்ற நிரஞ்சன் என்னும் மாணவனுக்கு மாவட்ட அளவிலான அக்ஷரமுற்றம் வினாடி வினாப் போட்டியில் பங்கேற்பதற்கான பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. குழந்தைகளது முறையான பயிற்சியும், பெற்றோர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் உறுதுணையுமே குழந்தைகளது இந்த வெற்றிக்குக் காரணம். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.


கலைவிழா

  • ப்ரணீத் கே.எஸ் - கர்நாடக சங்கீதம் முதலிடம் A Grade, கன்னட கவிதை சொல்லுதல் முதலிடம் A Grade
  • தேவஸ்ரி டி.எஸ் - ஆக்ஷன் சாங் ஆங்கிலம் முதலிடம் A grade
  • வீனய் சி.ஆர் - கவிதை மொழிதல் இரண்டாவது இடம் A grade
  • இஷா ரஞ்சித் - மெல்லிசை மூன்றாவது இடம் A grade


ஓவியப் போட்டியில் மாபெரும் வெற்றி

சித்தூரிலுள்ள மிகமுக்கிய நிறுவனமான பிக்மார்ட்டில் (Big Mart) நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி ஸ்ரீலக்ஷ்மி முதலிடம் பெற்றாள். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போட்டியில் முதலிடம் என்பது மிகவும் சிறப்பானதுவே. 1001 ரூபாயும் விருதும் சான்றிதழும் இந்த குழந்தைக்கு கிடைத்தது. இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ள திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, ஊக்குவிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களே நமது ஆசிரியர்கள். நமது பள்ளி ஓவியரான ஸ்ரீலக்ஷ்மியின் வெற்றியில் அனைத்து குழந்தைகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டோம். இந்த வெற்றி மற்றுள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுதலாக வேண்டுமென்று தலைமையாசிரியை ஷைலஜா பாராட்டினர். பல்வேறு திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பது எங்களது பள்ளி ஆசிரியர்களே. இது குழந்தைகளுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான பயத்தை நீக்கி அவர்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறது.

வெற்றித்திருவிழா

அரசு ஆரம்பப் பள்ளி சித்தூரின் முதல் கற்றல் திருவிழாவே சிறப்பான வெற்றியை தந்தது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்திருவிழாவில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் தயாளன் என்னும் மாணவனது ஆங்கிலப் பேச்சு மிக மிக சிறப்பானதாக இருந்தது. Cleanliness என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினான். இது பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது தான் உண்மை. ஆங்கில மொழிக் கல்வியின் சிறப்பை இந்த மூன்றாம் வகுப்பு மாணவனின் பேச்சின் மூலம் நமக்கு புரிந்து கொள்ள முடியும். பொது கல்விக் கூடங்கள் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்குழந்தையின் பேச்சாற்றல். பார்வையாளர்களில் ஒருவரான அரசு ஆரம்ப பள்ளி சள்ளையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த பேச்சாற்றலைக் கண்டு வியந்து, அவனது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் புகழ்ந்து பாராட்டினார். எதிர்காலத்தில் வெற்றியின் உச்சியை தயாளன் அடையட்டும் என ஆசிர்வதித்து ஒரு பரிசு வழங்கவும் செய்தார். எங்களது கற்றல் திருவிழாவிற்கு இவ்வளவு சிறப்பான ஒரு பலன் கிடைக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. எனவே எல்லா ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும், பெற்றோர்களும் பார்வையாளர்களும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினர். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு உறைவிடம் உண்டு என்பது சத்தியமாகும். அதுபோல இப்பள்ளியின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் இங்கு பயிலும் மாணவர்களே.