ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்

எல் எஸ் எஸ் வெற்றி- 2020

எல்.எஸ்.எஸ்[1] தேர்வில் வெற்றிக் கொடியை நாட்டினர் நமது பள்ளியிலுள்ள எட்டு மாணவச் செல்வங்கள். ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் எல்.எஸ்.எஸ் குழந்தைகளின் எண்ணிக்கையினால் நமது பள்ளி நன்மதிப்பைப் பெற்றுள்ளது. சித்தூர் தாலுகாவிலேயே அதிக எல்.எஸ்.எஸ் பெற்ற ஒரு பொதுக்கல்விக்கூடம் நமது பள்ளிக்கூடம் ஆகும். அதுமட்டுமின்றி சித்தூர் தாலுக்காவிலேயே 80 மதிப்பெண்ணிற்கு 68 மதிப்பெண்களை பெற்ற ஒரே ஒரு வெற்றியாளர் நமது பள்ளியில் பயிலும் ஸ்னிக்தா என்னும் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பள்ளியின் தொடக்கத்தில் இருந்தே குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. குழந்தைகளுடைய வகுப்பு பாழாகாமல் எல் எஸ் எஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சனிக்கிழமைகளிலும் குழந்தைகளுக்கு மாதிரித் தேர்வுகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களான பவில்தாஸ், ஹேமாம்பிகா போன்றோர் எல் எஸ் எஸ் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கினர். குழந்தைகளுடைய இந்த மாபெரும் வெற்றி பள்ளிக்கூடத்திற்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.

அங்கீகாரம் அமைச்சரிடமும்

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு பெருமை சேர்த்த, எல்.எஸ்.எஸ்- 2019 வெற்றியாளர்களான ஆராமிகா. கெ.ஆர், ஸ்ரியா. எஸ், சூர்யா சுனில்குமார். எஸ், வைகப்பிரபா. கே.எஸ், ஷிவானி.ஆர், சனிகா.எஸ் என்னும் ஆறு மாணவிகள் ஆகஸ்ட் 3 ஆம் நாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டியிமிருந்து விருது பெற்றனர். எல்.எஸ்.எஸ் தேர்வில் தங்களது திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு எங்கள் அனைவரது பாராட்டுக்கள்...



அக்ஷரமுற்றம்-2019, துணை மாவட்ட வினாடி வினாப் போட்டி- இரட்டை வெற்றி

2019- ஆம் ஆண்டின் அக்ஷரமுற்றம்[2] துணைமாவட்ட அளவிலான வினாடி வினாப் போட்டியில் நமது பள்ளியிலிருந்து இரண்டு குழந்தைகள் பங்கேற்றனர். நிரஞ்சன்.எம் எனும் மாணவன் முதலிடத்தையும், ரிது எனும் மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மிகநல்ல முறையில் இவ்விரு குழந்தைகளும் பங்கேற்றனர் அக்டோபர் 12 சனிக்கிழமை ஜி.பி.யு.பி.எஸ் தத்தமங்கலத்தில் வைத்து நடைபெற்ற இப்போட்டியில் 82ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இதில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர் நமது குழந்தைகள். வெற்றியாளர்களுக்குக் கிடைத்த விருதுகளும், சான்றிதழ்களும் மற்றுள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. முதலிடத்தைப் பெற்ற நிரஞ்சன் என்னும் மாணவனுக்கு மாவட்ட அளவிலான அக்ஷரமுற்றம் வினாடி வினாப் போட்டியில் பங்கேற்பதற்கான பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. குழந்தைகளது முறையான பயிற்சியும், பெற்றோர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் உறுதுணையுமே குழந்தைகளது இந்த வெற்றிக்குக் காரணம். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.


கலைவிழா

  • ப்ரணீத் கே.எஸ் - கர்நாடக சங்கீதம் முதலிடம் A Grade, கன்னட கவிதை சொல்லுதல் முதலிடம் A Grade
  • தேவஸ்ரி டி.எஸ் - ஆக்ஷன் சாங் ஆங்கிலம் முதலிடம் A grade
  • வீனய் சி.ஆர் - கவிதை மொழிதல் இரண்டாவது இடம் A grade
  • இஷா ரஞ்சித் - மெல்லிசை மூன்றாவது இடம் A grade


ஓவியப் போட்டியில் மாபெரும் வெற்றி

சித்தூரிலுள்ள மிகமுக்கிய நிறுவனமான பிக்மார்ட்டில் (Big Mart) நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி ஸ்ரீலக்ஷ்மி முதலிடம் பெற்றாள். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போட்டியில் முதலிடம் என்பது பாராட்டுக்குரியதாகும். 1001 ரூபாயும் விருதும் சான்றிதழும் இந்த குழந்தைக்கு கிடைத்தது.

வெற்றித்திருவிழா

அரசு ஆரம்பப் பள்ளி சித்தூரின் முதல் கற்றல் திருவிழா[3]வே சிறப்பான வெற்றியைத் தந்தது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்திருவிழாவில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் தயாளன் என்னும் மாணவனது ஆங்கிலப் பேச்சு மிக மிக சிறப்பானதாக இருந்தது. Cleanliness என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினான். இது பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது தான் உண்மை. ஆங்கில மொழிக் கல்வியின் சிறப்பை இந்த மூன்றாம் வகுப்பு மாணவனின் பேச்சின் மூலம் புரிந்து கொள்ள முடியும். பொதுக்கல்விக் கூடங்கள் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்குழந்தையின் பேச்சாற்றல். பார்வையாளர்களில் ஒருவரான அரசு ஆரம்ப பள்ளி சள்ளையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த பேச்சாற்றலைக் கண்டு வியந்து, அவனது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் புகழ்ந்து பாராட்டினார். எதிர்காலத்தில் வெற்றியின் உச்சியை தயாளன் அடையட்டும் என ஆசிர்வதித்து ஒரு பரிசு வழங்கவும் செய்தார். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு உறைவிடம் உண்டு என்பது சத்தியமாகும். அதுபோல இப்பள்ளியின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் இங்கு பயிலும் மாணவர்களே.


வில்லுப்பாட்டும் ஜி.வி.எல்.பி பள்ளி மாணவர்களும்

பாலக்காடு மாவட்ட அளவிலான தமிழ் வழி மொழிக்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட திட்டமான தமிழ் தென்றலின் நிறைவு விழாவே வெற்றி முரசு. இதில் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்த தமிழ் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர். ஜி.வி.எல்.பி பள்ளியிலிருந்து தயாளன், சுருதிகா, சியாம், கோகுல், ஹரிணி, ரூபிணி போன்ற மாணவர்களும் சுப்ரபா, ரசியா பானு ஆகிய ஆசிரியர்களும் பங்கெடுத்தனர். "தந்தனத்தோம் என்று சொல்லியே... எனத் தொடங்கி அருமையான ஒரு வில்லிசையை அரங்கமே அதிர இம்மாணவர்கள் அரங்கேற்றினர். DIETலுள்ள ஆசிரியர்களும் உபமாவட்ட கல்விஅலுவலர், பி.ஆர்.சி BPC மற்று பள்ளி ஆசிரியர்களும் இக்குழந்தைகளை பாராட்டிப் பெருமைப்படுத்தினர். இந்த பெருமையைப் பெற்றுத் தந்த மாணாக்கர்களை தலைமையாசிரியரும் மற்று ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.


ஆவணம்

  1. நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு நடத்தும் உதவித்தொகை தேர்வு
  2. தேசாபிமானி செய்தித்தாள் கேரள பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்திவரும் வினாடி வினா போட்டி
  3. பள்ளியின் கற்றல் மேன்பாட்டை வெளிப்புத்துவதற்கான மேடை