ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
2025 - 26, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா 2025-26

2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி நுழைவு விழா நமது பள்ளியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுக்கல்வியை வலுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அளவில் அமுல்படுத்தப்பட்ட " ஒருங்கிணைந்த கல்வி மேன்மை திட்ட"த்தின் தாக்கம் பள்ளி நுழைவு விழாவிலும் தெளிவாகக் காணப்பட்டது.

நிகழ்ச்சியை சித்தூர் தத்தமங்கலம் நகராட்சித் தலைவி கே.எல். கவிதா தொடங்கி வைத்தார். நகர சபை கவுன்சிலர்கள் சுமதி, ஸ்ரீதேவி ரகுநாத், ஷீஜா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தீபா எ வரவேற்புரை நிகழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், எம்.பி.டி.ஏ தலைவர் ரஷ்மி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கே.பி. ரஞ்சித் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். ஆசிரியை சுனிதா எஸ் நன்றி கூறினார்.

புதிய மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் மற்றும் வண்ணக் கண்ணாடிகள் பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் லட்டு வழங்கப்பட்டது. இவ்வருட பள்ளி நுழைவு விழா புதிய கல்வியாண்டின் சிறந்த தொடக்கமாக அமைந்தது. இது மாணவர்களிலும் பெற்றோர்களிலும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தூண்டி, பள்ளியின் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தியது.

சுற்றுச்சூழல் தினவிழா

"நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வெல்லுவோம்" என்ற முழக்கத்துடன் நமது பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவை பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், தலைமை ஆசிரியர் தீபா எ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி காலைக் கூட்டத்தில் மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறினர். மாணவர்கள் தயார் செய்த போஸ்டர்கள், முத்திரை வாக்கியங்கள், படங்கள், பிரசுரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உரை, கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தொடர்பான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் கொண்டுவந்ததும், சித்தூர் தொழில்நுட்ப பள்ளியிலிருந்து (JTS Chittur) கிடைத்ததுமான மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிடவும் செய்யப்பட்டது.

வாசிப்பு தினம்

யோகா தினம்


போதைப்பொருள் ஒழிப்பு தினம்

நாட்டையே விழுங்கக்கூடிய பேராபத்தை எதிரிட, போதையின் சங்கிலியை உடைத்து எறிந்து முன்னேற மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. காலைக் கூட்டத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி கூறினர். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகளும் படங்களும் அடங்கிய மாணவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. போதைப் பொருளுக்கு எதிரான மனநிலையை உறுதிப்படுத்த விளையாட்டு பயிற்சியின் தலைமையில் “சும்பநடனம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நமது முதலமைச்சர் பிணராய் விஜயனின் போதைப்பொருள் ஒழிப்பு தின அறிக்கையின் வீடியோவும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.