ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2017-18" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 138: വരി 138:
|-
|-
|}
|}
----
{|
|-
| style="background:#F0F8FF; border:4px solid #00aa00; padding:1cm; margin:auto;"|
==<u><font size=6><b><center>நவம்பர்</center></b></font></u>==
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;"><font size=5>'''கேரளப்பிறவி தினம்'''</font></div>
                 
<font size=3>கேரள மண்ணின் மணமுள்ள சில கலை நிகழ்வுகள் நவம்பர் 1 கேரளப்பிறவி தின காலைக் கூட்டத்தில் நடந்தேறியது.கேரள பண்பாட்டை பறைசாற்றுவதாக அமைந்த இந்நிகழ்வுகள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.</font>
<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;"><font size=5>'''குழந்தைகள் தினம்'''</font></div>
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-child1.jpg|200px]] ||[[ചിത്രം:21302-child2.jpg|200px]]
|-
|-
|}</center>                 
<font size=3>
நவம்பர் 14, குழந்தைகள் தினத்தன்று குழந்தைகள் நேரு மாமாவின் வேடமணிந்து காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மழலை குழந்தைகளுக்கு முக்கியத்துவமிக்க காலை கூட்டமாக விளங்கியது. நேருஜியின்ஒலிப்பதிவு ஒலிப்பெருக்கி வாயிலாக ஒலிபரப்பப்பட்டது.</font>
|-
|}
----

22:10, 13 ഡിസംബർ 2019-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

2017-18 கல்வி ஆண்டின் செயல்பாடுகளும், தினக் கொண்டாட்டங்களும்

ஜூன்

நுழைவுத் திருவிழா

2017 -18 கல்வி ஆண்டின் முதல் நாளான ஜூன் 1- பல்வேறு நிகழ்வுகளுடன் இனிதே தொடங்கியது. வண்ண பலூன்களை கையிலேந்திய வண்ணம் குழந்தைகளும் பெற்றோரும் இன்முகத்துடன் மகிழ்ச்சி பொங்க காட்சியளித்தனர். தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். PTA தலைவர் சிறப்புரையாற்றினார். வார்டு கவுன்சிலர் திரு.சிவகுமார் அவர்கள் நுழைவுத் திருவிழாவை இனிதே தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் திரு.மணிகண்டன், PTA துணைத் தலைவர் திரு.சுதாகரன் போன்றோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகம் போன்றன வழங்கப்பட்டது. புதிய மாணாக்கருக்கு கையேடு, பென்சில், செதுக்கி ,அழிப்பான் போன்றன அடங்கிய பை இலவசமாய் அளிக்கப்பட்டது.

உலக சுற்றுச் சூழல் தினம்

வழக்கமான முறையில் இவ்வருடமும் ஜூன் 5 பல்வேறு நிகழ்வுகளோடு கொண்டாடப்பட்டது. மாணாக்கர் முத்திரை வாக்கிய அட்டைகளோடு ஊர்வலம் சென்றனர். பதிப்பு, சுவரொட்டி போன்றனவும் தயாரிக்கப்பட்டது. குறுநாடகம், வினாடிப் வினா போட்டி போன்றனவும் நடந்தேறியது. பல்லுயிரியல் பூங்கா உருவாக்கி, மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு.குஞ்ஞுகுஞ்ஞு என்பவர் இந்நிகழ்வுகளுக்கு தலைமை வகித்தார். இயற்கை வேளாண்மை குறித்தும், பயன்படாத குப்பிகளில் செடி வளர்க்கும் முறை பற்றியும், சொட்டு நீர் பாசனம் பற்றியும் விளக்கமளித்தார். விதைகளை விதைத்தும், கன்றுகள் நட்டும் இந்நாள் சிறப்பாக கடந்து போனது.

வாசிப்பு வாரம்

ஜூன் 19 வாசிப்பு வாரம் இருவார வாசிப்பு விழாவாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் திருமதி . கவிதா அவர்கள் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து " எனது வாணி" என்ற பள்ளிக்கூட வானொலி நிகழ்வு, நடந்தேறியது. வகுப்பறை நூலகங்கள் விரிவுபடுத்தப்பட்டது. கதை எழுதுதல், கவிதை எழுதுதல், வினாடி வினா நிகழ்ச்சி, சுவரொட்டி தயாரித்தல், வாசிப்பு போட்டி, கையெழுத்து போட்டி போன்றன நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின்ஒரு சில நூல்களில் வரும் கதாபாத்திரங்களை மாணவர்கள் வேடமிட்டு நடித்துக் காட்டினர்.

யோகா தினம்

யோகா செய்வதனால் ஏற்படும் நன்மைகள், யோகாவின் முக்கியத்துவம் போன்றவற்றை அனைவருக்கும் புரியும் வகையில் கூறி திரு.சுனில் அவர்கள் ஜூன் 21 அகில உலக யோகா தினத்தைத் தொடங்கி வைத்தார் . வாரத்தில் 2 நாட்கள் யோகா வகுப்புகள் நம் பள்ளியில் நடக்கிறது. 3, 4 வகுப்பிலுள்ள பிள்ளைகளைக்கு மட்டுமே யோகா வகுப்புகள் உள்ளன.


ஜூலை

பஷீர்தினம்

வாசிப்புவார நிறைவு விழாவுடன், மக்களின் எழுத்தாளர் என அறியப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் நினைவு தினமும் நடைபெற்றது.இதன் தொடச்சியாக ஜீலை 7 ஆம் தேதி சித்தூரிலுள்ள மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து ஆச்சாரியாரின் குருமடம் சென்று வந்தோம்.

വായന പക്ഷാചരണം

இரு வாரவாசிப்பு நிறைவு விழாவினையொட்டி ஜீலை 14 அன்று சித்தூர் துஞ்சன் நினைவு நூலகம் சென்றோம். 4ஆம் வகுப்பு பிள்ளைகளை உட்படுத்திய இப் பயணம் அனைவருக்கும் சிறந்த ஒரு அனுபவமாக அமைந்தது. பலவிதமான துறைகளைச் சார்ந்த சிறந்த புத்தகங்களின் தொகுப்பு இந்த நூலகத்தில் உண்டு... மலையாளம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி நூல்கள் இருந்தன.

வித்யாரங்கம், மலையாளஅரங்கு தொடக்கம்

ஜூலை 20 அன்று திருமதி. உமாமகேசுவரி அவர்கள் இரண்டு கல்வி அரங்குகளையும் தொடங்கி வைத்தார்.


சந்திர தினம்

சந்திர தினமான ஜூலை 21, காலையிலேயே குழந்தைகளுக்கு நிலா தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டது. மதியம் சிறுபரிசோதனைகள் செய்தும், நிலா வினைப் பற்றிய பாடல்கள் பாடியும் "அறிவியல் மன்றம் " தொடங்கப்பட்டது. பப்பெட் ஷோ நடைபெற்றது. நீல் ஆம்ஸ்ட்ராங் வேடமணிந்து வந்த மாணவன் அனைவர் கவனத்தையும் ஈர்த்தான்.

ஆண்டு பொதுக் கூட்டம்

2017- 2018 வருடத்தின் பள்ளிபொதுக்குழு ஜூலை 28 மதியம் கூடப்பட்டது. கவுன்சிலர் திரு.சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை திருமதி.ஷைலஜா அவர்கள் நிகழ்வுப் பதிவை வாசித்ததுடன் முன்வருட வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். 175 - ற்கும் அதிகமான பெற்றோர்கள் பங்கெடுத்த இக்கூட்டத்தில் புதிய PTA தலைவராக திரு.ரஞ்சித் அவர்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். PTA துணைத் தலைவராக திரு.சுதாகரன்அவர்களும் MPTA தலைவியாக திருமதி.ஷீபா போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


ஆகஸ்ட்

ஹிரோஷிமா தினம்

ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினத்தன்று முத்திரை வாக்கிய அட்டைகளுடன் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. போரின் துன்பங்களை உணர்த்த ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களின் காணொளி காண்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், வாகன் துயரம் போன்றனவும் சுதந்திர தின போராட்டத்தின் முக்கிய சரித்திர நிகழ்வுகளுடையவும் காணொளி காண்பித்தது பிள்ளைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியது.

சுதந்திர தினம்

ஆகஸ்ட் 15 , 70 ஆம் சுதந்திர தின விழாவான இன்று 9 மணியளவில் PTA தலைவர் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். குழந்தைகளின் சுதந்திரதின பதிப்பு வெளியிடப்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பாடியும், சுதந்திர கும்மியடித்தும் மகிழ்ச்சியான தருணங்களினூடே இவ்விழா கடந்து சென்றது. இனிப்பு வழங்குதலுடன் விழா இனிதே முடிவுற்றது.


செப்டம்பர்

ஓணவிழா

எல்லா வருடமும் பெற்றோரின் சிறந்த ஒத்துழைப்புடன் நடத்தக் கூடிய ஒரு சுபநிகழ்வு ஓணவிழாவையொட்டின ஓண விருந்து. தாய்மார்கள், ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து விருந்து சமைத்து 500 பேருக்கு மேல் உண்ண அன்னமிடுவோம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் பூக்களமிட்டும், ஓணப் பாட்டு, திருவாதிரைகளி, சுந்தரிக்கு பொட்டிடு , புலியாட்டம், மகாபலி, வாமன வேடம் அணிதல் என ஒவ்வொரு ஒணத்துக்கும் ஒரே விழாக்கோலம் தான் எங்கள் பள்ளியில். இதற்கு என்றும் எங்களுடன் ஒத்துழைக்கும் பெற்றோர் குழுவுக்கு எங்கள் சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


நவம்பர்

கேரளப்பிறவி தினம்

கேரள மண்ணின் மணமுள்ள சில கலை நிகழ்வுகள் நவம்பர் 1 கேரளப்பிறவி தின காலைக் கூட்டத்தில் நடந்தேறியது.கேரள பண்பாட்டை பறைசாற்றுவதாக அமைந்த இந்நிகழ்வுகள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.


குழந்தைகள் தினம்

நவம்பர் 14, குழந்தைகள் தினத்தன்று குழந்தைகள் நேரு மாமாவின் வேடமணிந்து காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மழலை குழந்தைகளுக்கு முக்கியத்துவமிக்க காலை கூட்டமாக விளங்கியது. நேருஜியின்ஒலிப்பதிவு ஒலிப்பெருக்கி வாயிலாக ஒலிபரப்பப்பட்டது.