"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
No edit summary
No edit summary
വരി 1: വരി 1:
{{PSchoolFrame/Pages}}
 
=='''2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்'''==
=='''2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்'''==



14:36, 16 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்

அங்கீகாரம் அமைச்சரிடமும்

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு பெருமை சேர்த்த, எல்.எஸ்.எஸ்- 2019 வெற்றியாளர்களான ஆராமிகா.கெ.ஆர், ஸ்ரியா. எஸ், சூர்யா சுனில்குமார். எஸ், வைகப்பிரபா. கே.எஸ், ஷிவானி.ஆர், சனிகா.எஸ் என்னும் ஆறு மாணவிகள் ஆகஸ்ட் 3 ஆம் நாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சரான திரு. கிருஷ்ணன் குட்டி அவர்களிடமிருந்து விருது பெற்றனர். எல்.எஸ்.எஸ் தேர்வில் தங்களது திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு எங்கள் அனைவரது பாராட்டுக்கள்...


பிரதிபோல்ஸவம் 2019- 20

ஆகஸ்ட் 3 ஆம் நாள் கே.எஸ்.டி.எ என்னும் ஆசிரியர் சங்கம் நடத்திய துணைமாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த நமது பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கின்ற நிரஞ்சன்.எம் என்னும் மாணவன் விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.



அக்ஷரமுற்றம்-2019, துணை மாவட்ட வினாடி வினாப் போட்டி- இரட்டை வெற்றி

2019- ஆம் ஆண்டின் அக்ஷரமுற்றம் துணை மாவட்ட அளவிலான வினாடி வினாப் போட்டியில் நமது பள்ளியிலிருந்து இரண்டு குழந்தைகள் பங்கேற்றனர். நிரஞ்சன்.எம் எனும் மாணவன் முதலிடத்தையும், ரிது எனும் மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மிகநல்ல முறையில் இவ்விரு குழந்தைகளும் பங்கேற்றனர் அக்டோபர் 12 சனிக்கிழமை ஜி.பி.யு.பி.எஸ் தத்தமங்கலத்தில் வைத்து நடைபெற்ற இப்போட்டியில் 82ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இதில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர் நமது குழந்தைகள். வெற்றியாளர்களுக்குக் கிடைத்த விருதுகளும், சான்றிதழ்களும் மற்றுள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. முதலிடத்தைப் பெற்ற நிரஞ்சன் என்னும் மாணவனுக்கு மாவட்ட அளவிலான அக்ஷரமுற்றம் வினாடி வினாப் போட்டியில் பங்கேற்பதற்கான பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. குழந்தைகளது முறையான பயிற்சியும், பெற்றோர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் உறுதுணையுமே குழந்தைகளது இந்த வெற்றிக்குக் காரணம். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.


கலைவிழா

  • ப்ரணீத் கே.எஸ் - கர்நாடக சங்கீதம் முதலிடம் A Grade, கன்னட கவிதை சொல்லுதல் முதலிடம் A Grade
  • தேவஸ்ரி டி.எஸ் - ஆக்ஷன் சாங் ஆங்கிலம் முதலிடம் A grade
  • வீனய் சி.ஆர் - கவிதை மொழிதல் இரண்டாவது இடம் A grade
  • இஷா ரஞ்சித் - மெல்லிசை மூன்றாவது இடம் A grade


ஓவியப் போட்டியில் மாபெரும் வெற்றி

சித்தூரிலுள்ள மிகமுக்கிய நிறுவனமான பிக்மார்ட்டில் (Big Mart) நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி ஸ்ரீலக்ஷ்மி முதலிடம் பெற்றாள். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போட்டியில் முதலிடம் என்பது மிகவும் சிறப்பானதுவே. 1001 ரூபாயும் விருதும் சான்றிதழும் இந்த குழந்தைக்கு கிடைத்தது. இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ள திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, ஊக்குவிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களே நமது ஆசிரியர்கள். நமது பள்ளி ஓவியரான ஸ்ரீலக்ஷ்மியின் வெற்றியில் அனைத்து குழந்தைகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டோம். இந்த வெற்றி மற்றுள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுதலாக வேண்டுமென்று தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் பாராட்டினர். பல்வேறு திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பது எங்களது பள்ளி ஆசிரியர்களே. இது குழந்தைகளுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான பயத்தை நீக்கி அவர்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறது.