Jump to content

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2021-22" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 141: വരി 141:
2021 ஜனவரி 26, நாட்டின் 73வது குடியரசு தினம் கோவிட் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து கொண்டாடப்பட்டது. மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளியின் குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். குடியரசு தின விழா பிரார்த்தனையுடன் தொடங்கியது. சரியாக 9 மணிக்கு ஆசிரியை சுனிதா கொடியேற்றினார். பின்னர் கொடி வணக்கம் மற்றும் கொடிப்பாடல் பாடப்பட்டது. தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா நிறைவு பெற்றது. பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் காணொளி வகுப்புக் குழுக்களில் குழந்தைகளுக்குப் பகிரப்பட்டது. குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். அனைவரும் தேசபக்தி பாடல்கள், குடியரசு தின பதிப்புகள், சொற்பொழிவுகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேடம் ஆகியவற்றை தங்கள் வகுப்புக் குழுக்களில் பகிர்ந்தனர். குடியரசு தின விழாவில், முன்தொடக்கம் முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளும் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளிலும் உள்ள குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை வகுப்புக் குழுக்களில் பகிர்ந்து கொண்டனர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி குழந்தைகளுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்களும் அவர்களின் சிறந்த படைப்புகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.
2021 ஜனவரி 26, நாட்டின் 73வது குடியரசு தினம் கோவிட் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து கொண்டாடப்பட்டது. மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளியின் குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். குடியரசு தின விழா பிரார்த்தனையுடன் தொடங்கியது. சரியாக 9 மணிக்கு ஆசிரியை சுனிதா கொடியேற்றினார். பின்னர் கொடி வணக்கம் மற்றும் கொடிப்பாடல் பாடப்பட்டது. தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா நிறைவு பெற்றது. பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் காணொளி வகுப்புக் குழுக்களில் குழந்தைகளுக்குப் பகிரப்பட்டது. குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். அனைவரும் தேசபக்தி பாடல்கள், குடியரசு தின பதிப்புகள், சொற்பொழிவுகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேடம் ஆகியவற்றை தங்கள் வகுப்புக் குழுக்களில் பகிர்ந்தனர். குடியரசு தின விழாவில், முன்தொடக்கம் முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளும் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளிலும் உள்ள குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை வகுப்புக் குழுக்களில் பகிர்ந்து கொண்டனர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி குழந்தைகளுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்களும் அவர்களின் சிறந்த படைப்புகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.
* வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=9ZBu_CstUVo குடியரசு தினம்-2022]
* வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=9ZBu_CstUVo குடியரசு தினம்-2022]
===பிப்ரவரி===
====உல்லாசகணிதத்தின் துவக்கம்====
[[പ്രമാണം:21302-ullasaganitham.jpeg|200px|thumb]]
உல்லாசகணிதம் என்பது அனைத்து குழந்தைகளுக்கும் கணிதத்தின் அடிப்படை  திறன்களை உறுதி செய்வதற்காக கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். நமது பள்ளியில் 1, 2 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுடையவும் மற்றும் பெற்றோர்களுடையவும் முழு பங்களிப்பும் இருந்தது. 05.02.2022 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்தார். சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர் வி.சுமதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஆசிரியை எஸ். சுனிதா. கணிதம் என்பது மகிழ்ச்சியுடன் படிக்க வேண்டிய பாடம் என்றும், அனைவரும் விருப்பத்துடன் அணுகினால் அதை வேடிக்கையாகக் கற்கலாம் என்றும் கூறினார். குழந்தைகள் கணிதத்தை ரசிக்கிறார்கள் என்பதை பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ரசிக்கக்கூடிய கணிதக் கற்றலை விரும்புகிறார்கள், இயந்திர கணிதத்தை அல்ல, என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து வேடிக்கையான கணிதச்செயலில் ஈடுபட்ட இரண்டு செயல்பாடுகளின் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கான கணிதப் பெட்டி மூலம் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்பதை விளக்கினார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு உல்லாசகணிதம் மிகவும் உற்சாகமான அனுபவமாக மாறியுள்ளது. ஆசிரியைகளான  டி. ஜெயஸ்ரீ வாழ்த்துரையும்  எஸ்.சுப்ரபா நன்றியுரையும் வழங்கினார்.
5,358

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1634884" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്