ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2022-23ல் பெற்ற அங்கீகாரங்கள்

2022-23ல் பெற்ற அங்கீகாரங்கள்

ஒரு பொன் மகுடம் கூட, ஸ்கூல் விக்கி விருது - 2022

 

சித்தூர் ஜி.வி.எல். பி. பள்ளி, ஸ்கூல் விக்கியில் சிறந்த பக்கங்களை உருவாக்கியதற்காக பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி சட்டமன்ற வளாகத்தில் உள்ள சங்கரநாராயணன் தம்பி ஹாலில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அனுஸ்ரீ, நிவேத்யா, ஈஷா ரஞ்சித், வினய், சௌபர்ணிகா ஆகியோருடன் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, PSITC ரசியா பானு, PTA தலைவர் மோகன்தாஸ் ஆகியோரும் சேர்ந்து பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதோடு விருது, சான்றிதழ் மற்றும் 25000 ரூபாய் பண விருதையும் பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டியிடமிருந்து பெற்றுக் கொண்டனர். கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். ஸ்கூல் விக்கி விருது 2021 - 22

ஸ்கூல் விக்கி விருது - செய்தித்தாள்களில்

         

ஸ்கூல் விக்கி விருது - உள்ளூர் செய்தி சேனலில்

உள்ளூர் செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். - கைட் ஸ்கூல் விக்கி வெற்றியில் சித்தூர் ஜி.வி.எல். பி. பள்ளி

பாராட்டு விழா - துணை மாவட்ட அளவில்

ஸ்கூல் விக்கி விருது பெற்ற பள்ளிகளுக்கு சித்தூர் துணை மாவட்ட இணை பாடத்திட்ட குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஏ.இ.ஓ மாநாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சித் தலைவர் கே.எல். கவிதா துவக்கி வைத்தார். ஏ. இ.ஓ. குஞ்சு லட்சுமி தலைமை வகித்தார். எதிர்க்கட்சித் தலைவர் கே.சி. ப்ரீத், பி பி சி உன்னிகிருஷ்ணன், கைட் முதன்மை பயிற்சியாளர் பிரசாத், தலைமையாசிரியர் மன்ற உறுப்பினர்கள் சசிகுமார் எம், பிரசீதா, தினகரன், பிரமோத் மற்றும் செபி அலெக்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாலக்காடு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சித்தூர் ஜி வி எல் பி எஸ் தலைமையாசிரியை ஜெயலட்சுமி, பி எஸ் ஐ டி சி ரசியா ஆகியோர் சேர்ந்து விருது பெற்றுக் கொண்டனர்.

சிறந்த மாணவர் - 2022

சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் சிறந்த மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை எல் ஐ சி ஆஃப் இந்தியா வழங்கியது. தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். எல்ஐசி அதிகாரிகளான எல்.திலீப் (கிளை மேலாளர்), ஸ்ரீபிரகாஷ் (உதவி கிளை மேலாளர், ஆலோசகர்களான எம்.கோபாலகிருஷ்ணன், ஜோதிலட்சுமி, வி.கண்ணன் ஆகியோர் பேசினர்.பிடிஏ துணைத் தலைவர் சுகதன் ஜி வாழ்த்துரை வழங்கினார்.ஆசிரியை சுனிதா நன்றியுரை கூறினார்.