ഗവൺമെന്റ് ജി. എച്ച്. എസ്. എസ്. കരമന/അക്ഷരവൃക്ഷം/சுற்றுப்புறத் தூய்மை

14:30, 13 ഫെബ്രുവരി 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- PRIYA (സംവാദം | സംഭാവനകൾ) (PRIYA എന്ന ഉപയോക്താവ് ഗവൺമെൻറ്, ഗേൾസ് എച്ച്.എസ്.എസ് കരമന/അക്ഷരവൃക്ഷം/சுற்றுப்புறத் தூய்மை എന്ന താൾ ഗവൺമെന്റ് ജി. എച്ച്. എസ്. എസ്. കരമന/അക്ഷരവൃക്ഷം/சுற்றுப்புறத் தூய்மை എന്നാക്കി മാറ്റിയിരിക്കുന്നു)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)
சுற்றுப்புறத் தூய்மை

ஒரு ஊரில் ஒரு ஏழ்மையான குடும்பம் வாழ்ந்து வந்தது. அவ்வூரில் எங்கு பார்த்தாலும் குப்பையாக கிடக்கும். அந்த ஊரில் சுற்றுப்புறத் தூய்மையே கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் அந்த ஏழ்மையான குடும்பத்தினர் சுத்தத்தை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அக்குடும்பத்தினருக்கு இதுவரை ஒரு நோயும் அண்டியதில்லை. அக்குடும்பத்தில் அனைவரும் அன்றாட வேலை செய்தால் மட்டுமே உணவு கிடைக்கும். அவர்களுக்கு சொந்தமாக ஒரே ஒரு கொய்யாப்பழத்தோட்டம் இருந்தது. அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அக்குடும்பத்தில் ஒரு வயதான முதியவர் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் அவர் கொய்யாப் பழங்களை விற்க செல்லும்போது அந்த ஊரில் அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என அறிந்தார். அவருக்கு இந்த ஊரில் உள்ள குப்பைகளும் அசுத்தம் தான் காரணம் என அறிந்தார். அவரால் மக்கள் அவதிபடுவதை பார்க்க இயலவில்லை. அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் தனது தோட்டத்தில் காய்த்த பழங்களை ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊருக்குள் சென்றார். பிறகு அவர் அறிவித்தார்" உங்கள் வீட்டிலுள்ள அனைத்து குப்பைகளையும் இந்த வண்டியில் போட்டுவிடுங்கள். அதற்காக நான் பழங்கள் தருகிறேன் ". இதை கேட்டு ஓடி வந்தனர். அனைவரும் வரிசையாக நின்று குப்பைகளை கொட்டி விட்டு பழங்களை வாங்கி சென்றனர். அப்போது ஒரு சிறுமி வந்து" நீங்கள் எதற்காக இப்படி செய்கிறீர்கள்" என்று முதியவரை பார்த்து கேட்டாள். அதற்கு முதியவர்" இந்த ஊரில் அனைவரும் சுத்தத்தை கடைபிடிப்பதில்லை , அனைவரும் நோய்களால் அவதிபடுகின்றனர். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்படி செய்கிறேன்" என்றார்.

இதை கேட்ட அனைவரும் தங்களது தவறை உணர்ந்தனர். அந்த ஊருக்கே சுற்றுப்புறத் தூய்மை என்றால் என்ன என்பதை முதியவர் புரிய வைத்தார். அன்று முதல் மக்கள் அனைவரும் அவ்வூரை தூய்மையாக வைத்துக் கொண்டனர். வயதான காலத்திலும் தனது சுற்றுப்புறத் தூய்மை கொள்கையை தனது தளர்விலாத மனதோடு நிறைவேற்றினார்.

இதுபோல் நாமும் நமது நாட்டை தூய்மையாக வைத்துக்கொண்டு நம்மை துன்புறுத்தி வரும் கொரோனாவை விரட்டிடுவோம்!


യുവശ്രീ . എ
7 A ഗവ.ഗേൾസ് എച്ച്.എസ്.എസ്. കരമന
തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ല
തിരുവനന്തപുരം
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കഥ


 സാങ്കേതിക പരിശോധന - PRIYA തീയ്യതി: 13/ 02/ 2022 >> രചനാവിഭാഗം - കഥ