வரலாறு

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
11:06, 24 ജനുവരി 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21045 (സംവാദം | സംഭാവനകൾ) ('<big>கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர்...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)

கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை அவர்களின் ஆசிராலும், அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த திருவாளர் சுவாமியப்ப கவுண்டர் . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.

பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும் மட்டுமே இருந்தனர் . அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் அவர்கள் நிர்வாகியாகவும், திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும் நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . 212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர் .

"https://schoolwiki.in/index.php?title=வரலாறு&oldid=1385427" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്