ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
20:29, 1 ജൂലൈ 2024-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('<center><u><font size=5>'''2024 - 25, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்'''</font></u></center> == ஜூன்== === பள்ளி நுழைவுத் திருவிழா 2024-25=== {| class="wikitable" |- |200px|| പ്രമാണം:21302-1reopen24.jpg|2...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
2024 - 25, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா 2024-25

நமது பள்ளியின் நுழைவுத் திருவிழா ஓய்வுபெற்ற தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி துவக்கி வைத்தார். பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்த இவ்விழாவிற்கு, ஆசிரியை சுனிதா வரவேற்புரை கூறினார். PTA துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி. தலைவர் கே. பி. ரஞ்சித், எம்.பி.டி.ஏ. தலைவி கே. சுமதி உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் மாணவன் சுதீஷ் சோபனா இசை பாடினான். புதிய குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் வழங்கப்பட்டது. விடுமுறைக்கால செயல்பாடாக நடத்தப்பட்ட நாட்குறிப்பு தயாரிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வகுப்புகளுக்கு வழி நடத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய தலைமுறையினருக்கு நினைவூட்ட மற்றொரு சுற்றுச்சூழல் தினம். பள்ளி காலைக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறப்பட்டது. குழந்தைகள் சுவரொட்டிகள் மற்றும் முத்திரை வாக்கியங்களுடன் ஊர்வலம் நடத்தினர். குழந்தைகள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனர். பிடிஏ துணைத் தலைவர் ஜி.சுகதன் குழந்தைகள் பள்ளியில் மரக்கன்றுகள் நடவும் காய்கறி விதைகள் விதைக்கவும் செய்தனர். 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரம் மலையாளம்

சித்தூர் ஜெயண்ட்ஸ் குழுவினர் 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நமது பள்ளிக்கு வழங்கினர். சித்தூர் ஜெயண்ட்ஸ் குழு தலைவர் ரவிக்குமார், பள்ளி காலைக்கூட்டத்தில் மாணவர் பிரதிநிதிக்கு செய்தித்தாளை வழங்கி துவக்கி வைத்தார். ஜெயண்ட்ஸ் குழு பிரதிநிதிகள், மாத்ருபூமி நிருபர் சுரேந்திரநாத், PTA தலைவர் பி. மோகன்தாஸ், துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி. தலைவர் கே.பி.ரஞ்சித், ஆசிரியை எஸ். சுனிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர். இது குழந்தைகளிடம் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த உதவும்.