ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/தனித்துவமான செயல்பாடுகள்/அம்மாவுடன்

17:17, 18 ഓഗസ്റ്റ് 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)

அம்மாவுடன்

 ||   ||   ||  

சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளி 2022 - 23 ஆம் கல்வியாண்டின் தனித்துவமான செயல்பாடுகளில் ஒன்றாகும் அம்மாவுடன். குழந்தை தனது தாயுடன் நான்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளை செய்கின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் கவிதை மொழிதல், கதை சொல்லுதல், புத்தகக் குறிப்பு, செய்தித்தாள் வாசிப்பு போன்ற போட்டிகளில் தாயும் குழந்தையும் கலந்து கொண்டனர். தாய் மற்றும் குழந்தை கொண்ட குழு ஏதேனும் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்கலாம். தாய்மார்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு குழந்தைகளையும் உற்சாகப்படுத்தியது. இது நிகழ்ச்சிக்கு புத்துணர்வு அளித்ததோட ஒரு முன்மாதிரியான தனிச் செயலாகவும் அமைந்தது. அவர்களது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினர். போட்டியை மதிப்பீடு செய்து முதல் மூன்று வெற்றியாளர்களைக் கண்டறிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக அழைக்கப்பட்டனர். அவர்கள் நிகழ்ச்சியை மதிப்பிட்டதோடு கண்டு ரசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியும் கூறினர். அவர்களின் மதிப்பீட்டின்படி முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இது பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரும் அம்மாவுடன் அனுபவிக்கக்கூடிய ஒரு சிறந்த தனித்துவமான செயலாகும்.