ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/வாழ்க்கைமுறையும் தொழில்களும்
சித்தூர் மக்களின் வாழ்க்கைமுறையும் தொழில்களும்
தமிழக எல்லையில் உள்ள சித்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இன்றும் கிராமப்புற வாழ்க்கை முறையையே பின்பற்றுகின்றன. சித்தூர் நெல் சாகுபடியின் ஆதாரமாகவும் விவசாய செழிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் உள்ளது. அதனால்தான் மக்கள் இயல்பான வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிராமப்புறங்கள் என்பதால், பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் பிற கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் பால் பண்ணைக்கு சித்தூர் முக்கிய பங்காற்றுகிறது. பழங்காலத்திலிருந்தே கன்று காலிகள் வளர்ப்பு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. சித்தூர் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதியாகும்.
தேவாங்கபுரம் என்பது சித்தூரின் தலைசிறந்த நெய்தல் கிராமம். இங்கு நெசவுத் தொழில் இன்றும் நடைமுறையில் உள்ளது. பல முன்னேற்றங்கள் வந்தாலும் பல மாற்றங்களைச் சந்தித்தாலும், சித்தூர் மக்கள் இத்தகைய வாழ்க்கை முறைகள் மற்றும் கைத்தொழில்களையே பின்பற்றுகின்றனர். மிகவும் கிராமப்புறமாக இருப்பதால், நெசவு, தேங்காய் வியாபாரம், தச்சு, விவசாயம், மண்பாண்டம் செய்தல், முறம் தயாரித்தல், கட்டிட வேலை போன்ற கைத்தொழில்களையே இன்றும் கடைபிடித்து வருகின்றனர்.