"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 279: വരി 279:


==ஜனவரி==
==ஜனவரி==
===புத்தாண்டுக் கொண்டாட்டம் 2025===
புதிய ஆடைகள் அணிந்து, ஆசிரியர்களுடன் கேக் வெட்டி மாணவர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.  இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  பின்னர் குழந்தைகள் தயார் செய்த வாழ்த்து அட்டைகளை ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுத்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
=== கல்விச் சுற்றுலா===
=== கல்விச் சுற்றுலா===
இவ்வருட கல்விச் சுற்றுலா எர்ணாகுளம் ஆகும். 2.1.2025 வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு 4 ஆம் வகுப்பிலுள்ள 51 மாணவர்களும் 6 ஆசிரியர்களும்  4 PTA உறுப்பினர்களும்  கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர்.  முதலில் சென்றது கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஆகும்.  விமானங்கள் புறப்படுவதைப் பார்த்தது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.  காலை உணவுக்குப் பிறகு, மட்டாஞ்சேரியின் வரலாற்று மையமான ஜூதாபள்ளிக்கு செல்லப்பட்டது.  அங்கிருந்த வழிகாட்டி, பள்ளியின் வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார்.  அங்கிருந்து, நடைப்பயணமாகச் சென்று காவலர் அருங்காட்சியகம் மற்றும் டச்சு அரண்மனை பற்றி அறிந்து கொண்டனர்.  மீண்டும் பேருந்தில் ஏறி கொச்சி திரும்பினர்.  அங்கு தண்ணீர் மெட்ரோவில் பயணம் செய்யப்பட்டது. படகு சவாரியின் போது வலைகள் வேலை செய்வதையும் வல்லார்பாடம் கொள்கலன் முனையத்தையும் பார்க்க முடிந்தது.  பின்னர், மெட்ரோ ரயிலில் எடப்பள்ளி வரை பயணித்து லுலு மாளை அடைந்தனர்.  லுலுவிலேயே மதிய உணவு சாப்பிட்ட பிறகு, குழந்தைகள் அங்குள்ள விளையாட்டுகளில் (ஃபன்டூரா) விளையாடினர். அனைத்து விளையாட்டுகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர்.  மாலை 6 மணிக்கு விளையாட்டுகளை முடித்துக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிடைத்த பரிசையும் எடுத்துக் கொண்டு பயணம் திரும்பினர்.  வழியில் இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணிக்கு பள்ளி வந்தடைந்தனர்.  தங்களை ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோருடன் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டு குழந்தைகள் வீடு திரும்பினர்.
இவ்வருட கல்விச் சுற்றுலா எர்ணாகுளம் ஆகும். 2.1.2025 வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு 4 ஆம் வகுப்பிலுள்ள 51 மாணவர்களும் 6 ஆசிரியர்களும்  4 PTA உறுப்பினர்களும்  கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர்.  முதலில் சென்றது கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஆகும்.  விமானங்கள் புறப்படுவதைப் பார்த்தது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.  காலை உணவுக்குப் பிறகு, மட்டாஞ்சேரியின் வரலாற்று மையமான ஜூதாபள்ளிக்கு செல்லப்பட்டது.  அங்கிருந்த வழிகாட்டி, பள்ளியின் வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார்.  அங்கிருந்து, நடைப்பயணமாகச் சென்று காவலர் அருங்காட்சியகம் மற்றும் டச்சு அரண்மனை பற்றி அறிந்து கொண்டனர்.  மீண்டும் பேருந்தில் ஏறி கொச்சி திரும்பினர்.  அங்கு தண்ணீர் மெட்ரோவில் பயணம் செய்யப்பட்டது. படகு சவாரியின் போது வலைகள் வேலை செய்வதையும் வல்லார்பாடம் கொள்கலன் முனையத்தையும் பார்க்க முடிந்தது.  பின்னர், மெட்ரோ ரயிலில் எடப்பள்ளி வரை பயணித்து லுலு மாளை அடைந்தனர்.  லுலுவிலேயே மதிய உணவு சாப்பிட்ட பிறகு, குழந்தைகள் அங்குள்ள விளையாட்டுகளில் (ஃபன்டூரா) விளையாடினர். அனைத்து விளையாட்டுகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர்.  மாலை 6 மணிக்கு விளையாட்டுகளை முடித்துக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிடைத்த பரிசையும் எடுத்துக் கொண்டு பயணம் திரும்பினர்.  வழியில் இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணிக்கு பள்ளி வந்தடைந்தனர்.  தங்களை ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோருடன் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டு குழந்தைகள் வீடு திரும்பினர்.
= ==திரைப்பட விழா-2025
15 வது பாஞ்சஜன்யம் சர்வதேச திரைப்பட விழாவின் (PIFF) ஒரு பகுதியாக, சித்தூர் சித்ராஞ்சலி கைரளி-ஸ்ரீ திரையரங்கில் ஜனவரி 23, வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு வைல்ட் ரோபோட் திரைப்படம்  திரையிடப்பட்டது. நமது பள்ளியிலுள்ள 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
===பழ சாலட் ===
23.1.2025 வியாழக்கிழமை, 1 ஆம் வகுப்பினர் பாடத் தொடர்பாக 'ஃப்ரூட் சாலட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.  இதற்காக குழந்தைகள் வீட்டிலிருந்து பலவிதமான பழங்களை வெட்டி எடுத்து வந்தனர்.  அவை வகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. பிறகு அந்த பழங்களோடு தேனும் சேர்த்து ஃப்ரூட் சாலட் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஃப்ரூட் சாலட்டை குழந்தைகள் அனைவரும் சுவைத்தனர்.  இச்செயல்பாட்டின் மூலம், குழந்தைகள் பல்வேறு வகையான பழங்களை அறிந்து கொள்ளவும், அவற்றின் வாசனை மற்றும் சுவையை அடையாளம் காணவும் முடிந்தது.
===குடியரசு தினம்===
இந்தியாவின் 76வது குடியரசு தின விழா குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சேர்ந்து கொண்டாடப்பட்டது.  குழந்தைகள் பெற்றோருடன் காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்தனர்.  சரியாக காலை 9.00 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைவி எம் ஜே ஈஷாவுடன் சேர்ந்து அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர்.  பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது.  தலைமையாசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி.  மோகன்தாஸ், PTA துணைத் தலைவர் ஜி.  சுகதன், ஆசிரியை சுனிதா எஸ் ஆகியோர் குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு குழந்தைகள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.
5,767

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2641981" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്