"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 205: വരി 205:
===ஹரித வித்யாலயம் ப்ரோமோ படப்பிடிப்பு===
===ஹரித வித்யாலயம் ப்ரோமோ படப்பிடிப்பு===
அரசின் ரியாலிட்டி ஷோவான ஹரிதவித்யாலயம் போட்டிக்கு நமது சித்தூர் ஜிவிஎல்பி பள்ளி தேர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 22.11.2022 அன்று CDit நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் பள்ளியின் தனித்துவமான செயல்பாடுகளை படமாக்க பள்ளிக்கு வந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலைக்கூட்டம் முதல் சுமார் இருபது நிகழ்ச்சிகளை மிக விரிவாக செயல்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தயாராக இருந்தனர். பள்ளியின் பெளதீக சூழ்நிலையும், கற்றல் மேன்மைகளையும் தகவல் தொழில்நுட்ப யுக்திகளைப் பயன்படுத்தியுள்ள கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளும் படமெடுக்கப்பட்டன. கோவிட் காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் செயல்பாடுகளின் காணொளிகளும் காண்பிக்கப்பட்டது . முன்னர் நடத்திய பள்ளித் தேர்தல், கல்விச் சுற்றுலா, அம்மாவுடன் போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டன. 4 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து வரலாற்றுச் நினைவுச்சின்னமான சித்தூர் துஞ்சன் மடத்திற்கு ஒரு கல்விப் பயணத்தை ஏற்பாடு செய்தனர்.  இயற்கை அழகையும், விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விவசாயிகள் தினத்தன்று நடத்தப்பட்ட ஆய்வுப் பயணமும் மீண்டும் நடத்தப்பட்டது. துணை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிக்கு வருகை தந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினார். PTA தலைவர், SMC தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். KITEன் முதன்மைப் பயிற்சியாளர் பிரசாத் தேவையான வழிகாட்டுதலையும் உதவிகளையும் வழங்கி உடனிருந்தார். தற்காலிகமாக தலைமையாசிரியை பொறுப்பிலுள்ள சுனிதா படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடைந்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அரசின் ரியாலிட்டி ஷோவான ஹரிதவித்யாலயம் போட்டிக்கு நமது சித்தூர் ஜிவிஎல்பி பள்ளி தேர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 22.11.2022 அன்று CDit நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் பள்ளியின் தனித்துவமான செயல்பாடுகளை படமாக்க பள்ளிக்கு வந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலைக்கூட்டம் முதல் சுமார் இருபது நிகழ்ச்சிகளை மிக விரிவாக செயல்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தயாராக இருந்தனர். பள்ளியின் பெளதீக சூழ்நிலையும், கற்றல் மேன்மைகளையும் தகவல் தொழில்நுட்ப யுக்திகளைப் பயன்படுத்தியுள்ள கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளும் படமெடுக்கப்பட்டன. கோவிட் காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் செயல்பாடுகளின் காணொளிகளும் காண்பிக்கப்பட்டது . முன்னர் நடத்திய பள்ளித் தேர்தல், கல்விச் சுற்றுலா, அம்மாவுடன் போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டன. 4 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து வரலாற்றுச் நினைவுச்சின்னமான சித்தூர் துஞ்சன் மடத்திற்கு ஒரு கல்விப் பயணத்தை ஏற்பாடு செய்தனர்.  இயற்கை அழகையும், விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விவசாயிகள் தினத்தன்று நடத்தப்பட்ட ஆய்வுப் பயணமும் மீண்டும் நடத்தப்பட்டது. துணை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிக்கு வருகை தந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினார். PTA தலைவர், SMC தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். KITEன் முதன்மைப் பயிற்சியாளர் பிரசாத் தேவையான வழிகாட்டுதலையும் உதவிகளையும் வழங்கி உடனிருந்தார். தற்காலிகமாக தலைமையாசிரியை பொறுப்பிலுள்ள சுனிதா படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடைந்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
==டிசம்பர் ==
===மாற்றுத்திறனாளிகள் தினக்கொண்டாட்டம்===
மாற்றுத்திறனாளிகள் தினத்தின் பகுதியாக அந்த வகையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  மாற்றுத்திறனாளி மைய காலைக் கூட்டத்தில் இந்திரஜித்தின் ஆங்கில பேச்சு சிறப்பாக இருந்தது.  குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  ஒவ்வொரு குழந்தையும் தங்கள்  உள்ளங்கைகளைமையில் முக்கி சார்ட்டில் பதித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்தினர்.  நந்தனாவின் நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  சதா காகிதப் பூக்கள் உருவாக்கி குழந்தைகளுக்கு வழங்கினாள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரையோண்கள் மற்றும் ஓவியப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.  ஆசிரியை அம்பிகாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.  பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் சேர்ந்து புல்க்கூடு உருவாக்கினர்.  கிறிஸ்துமஸ் தாத்தாவும் குழந்தைகளும் சேர்ந்து நடனமாடி, பாட்டுப் பாடி, பரிசுகளை வழங்கினர்.  குழந்தைகள் அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.  இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை லில்லியின் வகையாக குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கொண்டுவந்த கேக்கை வெட்டி நண்பர்களுக்குக் கொடுத்தாள்.