"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 314: | വരി 314: | ||
|- | |- | ||
|} | |} | ||
2025–26 கல்வியாண்டிற்கான கல்விச் சுற்றுலா 23/01/2026 வெள்ளிக்கிழமை அன்று எர்ணாகுளத்திற்குச் சென்றது. காலை 5 மணிக்கு தொடங்கிய இந்தப் பயணத்தில் 56 மாணவர்கள், 7 ஆசிரியர்கள் மற்றும் 6 பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதலில் நெடும்பாசேரி விமான நிலையத்திற்குச் செல்லப்பட்டது. விமானங்கள் வந்து இறங்குவதும் புறப்படுவதுமான காட்சிகள் மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தின. விமானப் பணிப்பெண்கள் (Air Hostess), கேபின் குழுவினர், பாதுகாப்புப் பணியாளர்கள், வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புத் துறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. | |||
அதனைத் தொடர்ந்து மட்டாஞ்சேரி யூத தேவாலயத்திற்குச் செல்லப்பட்டது. யூதத் தெருக்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழங்காலப் பொருட்கள், அத்தர் மற்றும் கைவினைப் பொருட்கள் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்தன. சினகோக் தேவாலயத்தின் வரலாற்றை வழிகாட்டி மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார். | |||
பின்னர் வாட்டர் மெட்ரோவில் பயணம் மேற்கொள்ளப்பட்டது. படகுகள், கடலோரக் காவல்படையின் பிரமாண்ட கப்பல்கள், கரையோர அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றைக் கண்டு மாணவர்கள் வியப்புற்றனர். படகிற்குள் மாணவர்கள் நடனம் ஆடி ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து லுலு மாளை அடைந்தோம். மதிய உணவிற்குப் பிறகு பலவேறு விளையாட்டுக்களில் (Funtura) மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். லுலு மாளில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஜூஸ், கேக், பென்சில், ஸ்கேல் ஆகியவற்றுடன் திரும்பும் பயணம் தொடங்கியது. இரவு 11:30 மணிக்கு பள்ளியை வந்தடைந்தோம். | |||
* | * வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=9lqHfpE1Mg4 '''கல்விச்சுற்றுலா - 2025'''] | ||
===தியாகிகள் தினம் === | |||
காந்திஜியின் நினைவு (ஜனவரி 30) நாளை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு காலைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் காந்திஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டங்கள் குறித்து உரையாற்றினர். மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தேசத்தலைவர்களையும் அறிமுகப்படுத்தினர். காலை 11 மணிக்கு, சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மதியம் 2 மணிக்கு, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை விளக்கும் வீடியோ காட்சி மாணவர்களுக்குத் திரையிடப்பட்டது. | |||