"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 224: | വരി 224: | ||
===ஜயன்ட்ஸ் குழுவினர் - நன்கொடை=== | ===ஜயன்ட்ஸ் குழுவினர் - நன்கொடை=== | ||
சித்தூர், ஜயன்ட்ஸ் குழுவினர் நம் பள்ளிக்கு 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நன்கொடையாக வழங்கினர். செப்டம்பர் 22, திங்கட்கிழமை பள்ளி காலைக் கூட்டத்தில் ஜயன்ட்ஸ் குழுவின் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு முதல் செய்தித்தாளை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இத்தருணத்தில் கலந்து கொண்டனர். | சித்தூர், ஜயன்ட்ஸ் குழுவினர் நம் பள்ளிக்கு 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நன்கொடையாக வழங்கினர். செப்டம்பர் 22, திங்கட்கிழமை பள்ளி காலைக் கூட்டத்தில் ஜயன்ட்ஸ் குழுவின் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு முதல் செய்தித்தாளை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இத்தருணத்தில் கலந்து கொண்டனர். | ||
==நவம்பர்== | |||
===கேரளப்பிறவி தினம்=== | |||
கேரளாவின் 69-வது பிறந்தநாள் நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கேரளப் பாரம்பரிய உடையணிந்து வந்தனர். மலையாள மண்ணின் மகிமையைத் தூண்டும் கலை நிகழ்ச்சிகளும் மேடையற்றப்பட்டது. | |||
நடனம், பாடல், உரை, குழுப்பாடல், கேரளப்பிறவி வாழ்த்துக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். தலைமை ஆசிரியை தீபா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கேரளப் பிறவி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.கேரளப்பிறவி வினாடி வினாவில் ஸ்ரிகா பிரசாந்த் முதலிடமும் மித்ரஜாஶ்ரீ எம் இரண்டாவது இடமும் அபினிதா அ மூன்றாவது இடத்தையும் வென்றனர். வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது. | |||
===குழந்தைகள்தினக் கொண்டாட்டம் === | |||
குழந்தைகள்தினக் கொண்டாட்டம் நவம்பர் 14 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகளுக்குப் பிரியமான நாளாக அமைந்தது. ஏராளமான குழந்தைகள் நேருவின் வேடமணிந்து குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மேலும், அம்பேத்கர், ஜான்சி ராணி, அன்னைத்தெரசா போன்ற மகாத்மாக்களின் வேடமணிந்து வந்த குழந்தைகளும் கவனத்தை ஈர்த்தனர். முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் குட்டி நாடகம் அனைவரையும் ரசிக்கச் செய்தது. ஆப்பிள், மாம்பழம், தேங்காய் போன்ற வேடமணிந்து வந்த குழந்தைகளும் இருந்தனர். இரண்டாம் வகுப்பு மாணவன் ஆகத். ஆர் நேருவின் அழகிய ஓவியத்தை வரைந்து தலைமை ஆசிரியைக்கு அன்பளிப்பாக வழங்கினான். நேருவைப் பற்றிய பாடல், குழந்தைகள் தினப் பேச்சு, குழுப்பாடல், குழந்தைகள் தின வாழ்த்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். தலைமை ஆசிரியை தீபா, அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குழந்தைகள்தின வினாடிவினாவில் ஆதிதேவ் ஆர் முதலிடமும் ஸ்ரிகா பிரசாந்த் மற்றும் ஸ்ரீராம் கே எஸ் இரண்டாவது இடமும் மித்ரஜா ஸ்ரீ எம் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. | |||