துவக்க முகாம

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

ஒன்பதாம் வகுப்பு லிட்டில் கைட்ஸ் மாணவர்களின் துவக்க முகாம்.


லிட்டில் கைட்ஸ் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான துவக்க முகாம்


19 .01 .2022 புதன்கிழமை காலை 9.45 மணி முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான லிட்டில் கைட்ஸ் துவக்க முகாம் எங்கள் பள்ளியில் வைத்து நடைபெற்றது. துவக்க முகாமை தொடங்கி வைத்தவர் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய அருட்ந்தை அலேஸ் சுந்தர்ராஜ் அவர்களும் , துணைத் தலைமை ஆசிரியை சுகுணா அவர்களும் ஆவார்கள் . இவ்விழாவிற்கு முன்னுரை வழங்கியவர் திருமதி சோபி ஆசிரியை , நன்றி உரை கூறியவர் திருமதி திவ்யா ஆசிரியை. ஆக்னல் டோமினிக் ஆசிரியர் ,சோபி ஆசிரியை, திவ்யா ஆசிரியை ஆகிய 3 பேரும் இந்த முகாமை மாணவர்களுக்கு முன் நின்று வழி நடத்தினார்கள். முதலாவதாக குழு பிரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்லைன் வழியாக மாணவர்களை ஒரு விளையாட்டின் மூலமாக ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டது.

Grouping. Sb3 என்ற software யன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களாக கணினி முன் நிற்கும்போது அவர்கள் தலையில் தோன்றும் தொப்பியின் நிறத்தை வைத்து 5 குழுக்களாக பிரிக்கப்பட்டது . இன்றைய லிட்டில் கைட்ஸ் துவக்க முகாமில் 30 மாணவர்களும் பங்கேற்றனர் . ஒரு குழுவில் 6 மாணவர்கள் ஆக ஐந்து குழுக்கள் பிரிக்கப்பட்டது.

இரண்டாவது கணினிச் செயல்பாடு தலையால் ஒரு மட்டையை வைத்து பந்தை தட்டிவிடும் கணினி விளையாட்டாகும் . ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு மாணவர்கள் வீதம் இந்தப் போட்டியில் பங்கேற்றனர் . மாணவர்கள் மிக ஆர்வத்தோடும் , உற்சாகத்தோடும் இந்த விளையாட்டை விளையாடி னார்கள்.

மூன்று குழுக்கள் விளையாடியபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது . பின்பு KSEB க்கு போன் செய்து விசாரித்த பின் ஒரு மணி நேரத்தில் மீண்டும் மின் இணைப்பு கிடைத்தது . இந்த ஒரு மணி நேரத்திற்குள் identity card ற்கான புகைப்படம் எடுக்கப்பட்டது. பின்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி ஆனது வழங்கப்பட்டது.

மின்னிணைப்பு வந்ததும் மீதமுள்ள இரண்டு குழுக்கள் மிக உற்சாகத்தோடு விளையாடினார்கள். மாணவர்களுக்கு கார்ட்டூன் வரைபடம் ஆனது காண்பிக்கப்பட்டது. ஒரு சில மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் அதனுடைய பெயர்களை எழுதினார்கள்.

பின்பு மாணவர்களுக்கு அனிமேஷன் வகுப்பு ஆனது எடுக்கப்பட்டது. ஒரு கதையின் வாயிலாக அணிமேஷன் எடுக்கப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர் கேட்ட வினாவிற்கு போட்டி போட்டுக்கொண்டு பதில் அளித்தனர். மாணவர்கள் அனைவரும் அனிமேஷன் செயல்பாட்டை செய்து பார்த்தனர் .சில மாணவர்கள் மிக விரைவாகவும், சிலர் மிதமான வேகத்தில் செய்தனர். மிகவும் கற்பனை திறனுடன் விளையாடிய ஷபா ஷெரின், ஸ்டேஸி ,சினேகா , ஆயிஷா பாத்திமா ஆகியோர் உப மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய அனிமேஷன் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்பு மதிய உணவானது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .மகிழ்ச்சியுடன் உணவு உண்டபின் புரோகிராமிங் செயல்பாடு நடைபெற்றது .சில மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் ப்ரோக்ராமிங் படித்ததால் வகுப்பு மிக எளிதாக சென்றது. ப்ரோக்ராமிங் படித்த மாணவர்கள் மிக விரைவாக ப்ரோக்ராமிங் செய்து முடித்தனர். அனைவருக்கும் ப்ரோக்ராமிங் ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது . புரோகிராமில் உப மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய போட்டிக்கு கிஷோர் கிருஷ்ணா , விஷால் , மைக் நிஜோய், தேவதர்ஷினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாலை 3. 50 மணி அளவில் வீடியோ கான்பிரன்ஸ்ற்கான லிங் கிடைக்கப்பட்டது . அதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இன்றைய விழா 4.35 மணி அளவில் இனிதே நிறைவுற்றது. கேம்பில் மாணவர்களுக்கான வருகை பதிவிடப்பட்டது.

"https://schoolwiki.in/index.php?title=துவக்க_முகாம&oldid=1363812" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്