ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/Say No To Drugs Campaign

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
12:32, 28 നവംബർ 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('==<font size=5>'''போதைப்பொருட்களுக்கு எதிராக - புதியகேரள இயக்கம்'''</font>== கேரளா முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகின்றவேளையில் நமது பள்ளி...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)

போதைப்பொருட்களுக்கு எதிராக - புதியகேரள இயக்கம்

கேரளா முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகின்றவேளையில் நமது பள்ளியிலும் மாணவர்களுக்கு போதைப்பொருளற்ற வாழ்க்கைமுறையும் சிறந்த எதிர்காலமும் அளிப்பதற்கான வழிமுறைகள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யப்பட்டன.

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி

06.10.2022 அன்று காலைக் கூட்டத்தில் ஆசிரியை சுனிதா போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி சொல்லிக் கொடுத்தார். குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து கூறினர். அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் மிட்டாய், பிஸ்கட், இனிப்பு வகைகள், தின்பண்டங்கள் போன்றவற்றை வாங்க வேண்டாம் என தலைமையாசிரியை ஜெயலட்சுமி குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். ஆசிரியர்கள் சுப்ரபா, ஹித்தயத்துல்லா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, குழந்தைகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

புதுக்கேரள முன்னேற்றம் திட்டம் - துவக்கம்

போதைக்கு எதிரான புதியகேரள முன்னேற்றம் திட்டத்தை கேரள முதல்வர் பிணராயி விஜயன் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு பள்ளி குழந்தைகள் அனைவரும் காண்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

விழிப்புணர்வு வகுப்பு

பெற்றோருக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு வகுப்பும் நடத்தப்பட்டது. பாலக்காடு குழந்தைகள் நல அலுவலரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான குரியக்கோஸ் வகுப்பு எடுத்தார்.