ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/குழந்தைகள்/கதைகள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
അച്ചടി പതിപ്പ് നിലവിൽ പിന്തുണയ്ക്കുന്നില്ല, അതിൽ റെൻഡറിങ് പിഴവുകൾ ഉണ്ടാവാനിടയുണ്ട്. ദയവായി താങ്കളുടെ ബ്രൗസർ ബുക്ക്മാർക്കുകൾ പുതുക്കുക, ബ്രൗസറിൽ സ്വതേയുള്ള അച്ചടി സൗകര്യം ഉപയോഗിക്കുക.

கதைகள்

வரிசை எண் குழந்தைகள் கதைகள்
1 கடவுளும் வண்டிக்காரனும்

ஒரு வண்டிக்காரன் நான்கு சக்கர வண்டியொன்றை கிராமத்தின் தெரு ஒன்றில் ஓட்டிக்கொண்டு சென்றான். அப்போது ஒரு பள்ளத்தை நோக்கி வண்டியின் சக்கரம் சரிந்து தடம் புரண்டு விட்டது. பட்டிக்காட்டு வண்டிக்காரன் அதைக் கண்டு பிரமித்து நின்றுவிட்டான்.பள்ளத்தில் விழுந்துவிட்ட வண்டியைத் தூக்கி நிறுத்துவதற்கு முயற்சிக்காமல், தனக்கு உதவிசெய்ய ஆண்டவனை பலவாறாக உரத்த குரலில் கூவி அழைத்தான். ஆண்டவனும் அவன் முன்பு தோன்றி, உன் தோள்களால் முட்டுக்கொடுத்து சக்கரத்தைப் பள்ளத்திலிருந்து தூக்கி நிறுத்தி, மாடுகளையும் அதட்டி ஓட்டி உன் வேலைகளை நீயே செய்து கொள்ள முயற்சி செய்யும் வரை என்னை உதவிக்கு வரும்படிக் கூப்பிட்டு வணங்காதே. அப்படிச் செய்யாமல் என்னை உதவிக்கு அழைப்பதனால் உனக்கு விதப்பிரயோஜனமும் கிடைக்காது, என்று கூறியருளி மறைந்தார்.தன் கையே தனக்கு உதவி என்பதை பட்டிக்காட்டு வண்டிக்காரனும் புரிந்து கொண்டான்.

2 முயலின் தந்திரம்

ஒரு காட்டில் ஒரு முரட்டுச்சிங்கம் வசித்து வந்தது. அது அனைத்து விலங்குகளையும் ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு விலங்காக வந்து தனக்கு உணவாகக் கட்டளையிட்டது. அதன்படி முயலின் முறை வந்தபோது முயல் எப்படியாவது சிங்கத்திற்குப் பாடம் புகட்ட எண்ணியது. அதன்படி முயல் சிங்கத்திடம் தாமதமாக வந்தது. சிங்கம் முயலைப் பார்த்து தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டது. அப்போது முயல் அந்தக் கிணற்றுக்குள் வேறொரு சிங்கம் இருக்கிறது. அது தன்னை சாப்பிட வந்ததாகக் கூறியது. அதைக் கேட்ட முரட்டுச் சிங்கம் கிணற்றுக்குச் சென்று எட்டிப் பார்த்தது. அங்கு தண்ணீரில் தெரிந்த தனது நிழலை வேறு சிங்கம் என்று நினைத்தது. அதைத் தாக்க கிணற்றுக்குள் குதித்தது. முயலும் சிங்கத்திடமிருந்து தப்பித்துக் கொண்டது.

3 என் நண்பன்

அருண் என் நண்பன். காலை முதல் மாலை வரை எப்போதும் தண்ணீரிலேயே இருப்பான். வாயைத் திறந்து திறந்து மூடுவான். ஆனால் எதுவும் பேச மாட்டான். கண்ணை திறந்து கொண்டே தூங்குவான். அது எப்படி? அவன் வேறு யாரும் இல்லை நான் வளர்க்கும் மீன் தான்.