ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/கணித அறிவியல் சங்கம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
< ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ‎ | தமிழ்
12:58, 21 നവംബർ 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) (' {| |- | style="background:#F0F8FF; border:4px solid #007bb9; padding:1cm; margin:auto;"| <font size=6><center><u>'''க...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)
അച്ചടി പതിപ്പ് നിലവിൽ പിന്തുണയ്ക്കുന്നില്ല, അതിൽ റെൻഡറിങ് പിഴവുകൾ ഉണ്ടാവാനിടയുണ്ട്. ദയവായി താങ്കളുടെ ബ്രൗസർ ബുക്ക്മാർക്കുകൾ പുതുക്കുക, ബ്രൗസറിൽ സ്വതേയുള്ള അച്ചടി സൗകര്യം ഉപയോഗിക്കുക.
கணித அறிவியல் சங்கம்

முகவுரை

அறிவியல்களின் ராணி என்றறியப்படுவது நமது கணித அறிவியலே. கணிதம் மிக இனிமையானதும், இன்றியமையாததும் ஆகும். இத்தகைய கணிதத் திறன்களை மாணவர்களில் கொண்டு சேர்ப்பது கணிதச் சங்கமாகும். ஒவ்வொரு பள்ளியிலும் கணிதச் சங்கங்கள் உள்ளன. அது நல்ல முறையில் செயல்பட்டும் வருகிறது. கணிதத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான செயல்பாடுகளைக் கொடுத்து, அக்குழந்தைகளை கணிதத்துறையில் திறன் படைத்தவர்களாக மாற்ற முயல்கின்றோம். பொதுவாகவே குழந்தைகள் கணிதம் என்றாலே பயப்படுகின்றனர். எப்படி படித்தாலும், எவ்வளவு படித்தாலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாடமாக மாறிக்கொண்டிருக்கிறது கணிதம். பயப்படுத்தியும், துன்புறுத்தியும் கற்பிப்பதுவே இதற்கு காரணம்.

லட்சியங்கள்

  • குழந்தைகளுக்கு கணிதத்தின் மீதுள்ள ஆர்வமும், விருப்பமும் அதிகரிக்கிறது.
  • குழந்தைகளில் யுக்தி சிந்தனை வளர்க்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மாணவர்களையும் கணித அறிவுடையவர்களாக மாற்றப்படுகிறது.
  • கணிதத்தின் அவசியத்தை மாணாக்கர்களுக்கு அறியச் செய்தல்.

பலன்கள்

கணித நாடகங்கள் வாயிலாக குழந்தைகளுடைய நடிப்புத்திறன் வெளிக்கொணர முடிகிறது. கணித வினாடி வினா, புதிர் கணக்குகள், மனக்கணக்குகள் போன்றவற்றால் குழந்தைகளது யுக்தி சிந்தனையை வளர்க்க முடிகிறது. கணித மாதிரிகள் உருவாக்குதல் செயல்பாட்டின் மூலம் குழந்தைகளில் பொருட்கள் தயாரிக்கும் திறன் ஊக்குவிக்கப்படுகிறது. கணித வடிவங்கள் செய்யும்போது குழந்தைகளில் பொறுமையும், அளவெடுத்து துல்லியமாகவும், நுணுக்கமாகவும் வரையும் திறன் வளர்க்கப்படுகிறது. இத்தகைய பயிற்சி கணித சங்கம் வாயிலாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் கணிதமின்றி எதுவுமில்லை. இவ்வுண்மையை நுணுக்கமாக ஆசிரியர்களும், மாணவர்களும் ஆராயவேண்டும். எனவேதான் ஒவ்வொரு மாணாக்கர்களையும் கணித அறிவுடையவர்களாக மாற்ற கணித சங்க செயல்பாடுகளுக்கு முடியும்.

செயல்பாடுகள்

2018-19