ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/ஆங்கிலச் சங்கம்/ஆங்கிலச் சங்கம்
|
இந்த வருடத்தின் ஆங்கில விழா பிப்ரவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டது. பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியே ஆங்கில விழா. குழந்தைகள் ஆங்கில மொழியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் ரசனையோடு கற்பிப்பதற்காகவும் உள்ள ஒரு கற்றல் திட்டமாகும் ஆங்கில விழா. ஜி. வி. ஜி. எச். எஸ். எஸ் சித்தூரின் முன்னாள் பிரின்ஸிப்பாலும், ஆங்கில ஆசிரியையுமான திருமதி. சூரியகுமாரி இவ்விழாவினைத் தொடங்கி வைத்தார். ஆங்கிலக் கல்வியின் சிறப்புக்களைப் பற்றி ஆசிரியை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். எனவே கற்கும் பொழுதும் விருப்பத்தோடு கற்றால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்று அவர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் விழாவில் சிறப்பாகப் பங்கேற்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று சிறப்பானதாகவே இருந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு.ஸ்ரீஜித் அவர்கள் விழாவிற்கு தலைமைத் தாங்கினார். ஆங்கில மொழியை விரும்புவதற்கும் எளிமையாக கையாளுவதற்கும் உள்ள ஒரு மனப்பான்மை குழந்தைகளில் வளர்ப்பதற்கான ஒரு தொடக்கமாக இருந்தது இந்த ஆங்கில விழா. இவ்விழாவை மிக நல்ல முறையில் நடத்துவதற்காக குழந்தைகளும் ஆசிரியர்களும் வகித்த பங்கு எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும்.
- காணொளி காண்போம் -ஆங்கில விழா