ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /எனது நாடு/சம்பத்து மனை
சம்பத்து மனை
கொங்கன்படை தொடங்குவதற்கு முன்பே சித்தூரில் சம்பத்து குடும்பம் இருந்ததாக புராணம் கூறுகிறது. சம்பத்து மனை வெள்ளம்கூர் சமுதாயத்தைச் சேர்ந்தது. இவர்களின் பிறப்பிடம் தமிழ்நாட்டில் கரூரில் உள்ள காங்கயம் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் சித்தூரில் குடியேறினர். அவர்கள் நாயர்-மன்னடியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 20,000 பறை நெல் சாகுபடியுள்ள நிலம் அவர்களுக்கு இருந்தது. சித்தூர்காவு, பழையனூர்காவு, பகவதிகுளம் இவற்றிற்கு அருகே சம்பத்து மனை அமைந்துள்ளது. நான்கு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில் 25 அறைகள் உள்ளன. இம்மனை விசாலமான உட்புறங்கள், முற்றம், மரத்தால் உருவாக்கப்பட்ட இரகசிய அறைகள், குளம் துர்க்கையம்மன் கோயில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மச்சில் சித்தூரம்மாவை வைத்து வழிபட்டு வருகின்றனர். மேலும் மச்சில் பல நூற்றாண்டுகளாக அம்மன் ஆபரணங்கள், பள்ளிவாள், சலங்கை ஆகியவற்றைப் பாதுகாத்து வருகின்றனர்.
இன்று நாம் காணும் வீடு பல நூற்றாண்டுகளுக்கு முன் ஓலை குடிசையாக இருந்தது. ஹாலஸ்ய மஹாத்ம்யம், உத்தரராம சரிதம், ஜானகிபரிணயம் ஆகிய மகத்தான நூல்களை எழுதியவரும் சம்பத்து மனைத்தலைவருமான சாத்துக்குட்டிமன்னடியாரால் சம்பத்து மனை நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துஞ்சத் ராமானுஜனின் தந்தையுடன் சம்பத்து குடும்பம் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தெற்கேகிராமத்தில் உள்ள தற்போதைய பஜனை மடத்திற்கு சம்பத் குடும்பத்தினரால் நிலம் வழங்கப்பட்டது. இப்போதைய சம்பத்து மனைத்தலைவர் கண்ணன்குட்டி என்பவராவார்