ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2018-19ல் பெற்ற அங்கீகாரங்கள்

2018-19 ல் பெற்ற அங்கீகாரங்கள்

ஸ்கூல்விக்கி- பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாம் இடம்

 

நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! மாநிலத்தில் மிகவும் நல்ல முறையில் ஸ்கூல்விக்கி பதிவு செய்கின்ற பள்ளிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். மாவட்ட அளவில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும், விருதுகளும். துவக்கம் முதல் ஸ்கூல் விக்கி செயல்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்த மலப்புரம் மாவட்டத்தில் KITE னுடைய முதன்மை பயிற்சியாளரான கே. சபரீஷ் அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்பட்டது. ஸ்கூல்விக்கி - 2018 என்னும் போட்டியில் நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி என்னும் குட்டி பள்ளிக்கூடமும் பங்கேற்றது. 15000 பள்ளிகளுக்கு மேல் அங்கங்களாக உள்ள ஸ்கூல்விக்கியில் அனேகம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வென்று பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கூடம் கைப்பற்றியது.

கூடுதல் விபரங்கள்

செஸ் சாம்பியன்- 2018

 

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கான செஸ் சாம்பியன் 2018 போட்டியில் நமது பள்ளியிலிருந்து மூன்று மாணவிகள் பங்கேற்றனர். எல்.கே.ஜி முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கவும் செய்தனர். வைகப்பிரபா.கெ.எ, ஸனிகா. எஸ்,ஸ்ரியா. எஸ் என்கின்ற மாணவிகளே பங்கேற்றனர். இம்மாணவிகள் மாநில அளவில் விளையாடுவதற்கான மிகப்பெரும் வாய்ப்பைப் பெற்றனர். வைகப்பிரபா இரண்டாவது இடத்தையும் ஸனிகா மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினாள். இதற்கான மெடல்களும் சான்றிதழ்களும் விருதுகளும் பெற்றனர். மிகச்சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியதற்கு அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கும் ஒரு விருது கிடைத்தது.


எல்.எஸ்.எஸ் வெற்றி

 

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் வெற்றிகளில் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒன்றாகும் வருடந்தோறும் அதிகரித்து வரும் எல்.எஸ்.எஸ்[1] குழந்தைகளின் எண்ணிக்கை. ஒவ்வொரு வருடமும் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகின்றனர் இங்குள்ள குழந்தைகள். 2018- 19 கல்வி ஆண்டில் நமது பள்ளியில் ஸ்ரீயா. எஸ், ஆராமிகா. ஆர், சனிகா. எஸ், வைகப்பிரபா. கெ.எ, சூர்யா சுனில்குமார். எஸ், சிவானி. ஆர் என்னும் ஆறு குழந்தைகள் எல்.எஸ்.எஸ் பெற்றனர். சித்தூர் தாலூக்காவிலேயே அதிக எல்.எஸ்.எஸ் பெற்ற பள்ளிகளில் ஒன்றாக நம்பள்ளி திகழ்கிறது. எங்களது பள்ளியில் எல்.எஸ்.எஸ் பயிற்சியளிப்பது ஆசிரியர் பவில்தாஸாவார்.

ஆவணம்

  1. நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு நடத்தும் உதவித்தொகைத் தேர்வு