ജി.എച്ച്.എസ് വട്ടവട/അക്ഷരവൃക്ഷം/ நனவாகாத கனவு

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
நனவாகாத கனவு - கதை (കഥ)

ஒரு சிறு கிராமத்தில் ஏழை குடும்பம் வசித்து வந்தது. இங்கு அப்பா, அம்மா மற்றும் குழந்தைகளான சகுந்தலாதேவி மாரியம்மா சோமு ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இவர்கள் அன்றாடம் வேலை செய்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும். குழந்தைகள் மூவரும் பள்ளிக்கு சென்றனர். மூத்த மகளான சகுந்தலாதேவி பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் மேல் படிப்பிற்காக பலரின் உதவியுடன் வெளிநாடு சென்றாள்.


குடும்ப பொருளாதார நெருக்கடியின் நிமித்தம் மாரியம்மாவும் சோமுவும் தங்கள் பள்ளிக் கல்வியை இடை நிறுத்தம் செய்ய நேரிட்ட்து. பின்பு இவர்கள் இருவரும் சேர்ந்து விவசாயம் செய்யும் அப்பாவிற்கு உதவினர். சில நாட்கள் வெளியில் பிற வேலைக்கும் சென்று கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை தங்கள் உண்டியலில் சேமித்து வந்தனர். இந்த சேமிப்புத் தொகையை வைத்து தங்கள் அக்காவின் திருமண செலவை சந்திக்க வேண்டுமென்பதே இவர்களின் கனவு.


இச்சூழலில் தான் இந்த கிராமத்திலும் கொரோனா வைரஸ் மூலம் நோய் பரவியது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இந்த ஏழை குடும்பத்தைச் சார்ந்த அப்பாவும் ஒருவர். உடல் நிலை மிகவும் மோசமானதால் சிறிது நாட்கள் கழிந்து இந்த குடும்பத்தின் தகப்பனாரும் காலமானார். இவர்கள் வீட்டிலிருந்து அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.


வெளி நாட்டில் படிக்கும் மூத்த மகளான சகுந்தலாதேவி நாட்டில் ஊரடங்கு இருப்பதாலும், நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்து இடை நிறுத்தம் செய்யப்பட்டதாலும் வரவும் இயலவில்லை. அப்படியாக கொரோனா வைரஸ் தொற்றினால் அனைவரின் கனவும் நனவாகவில்லை. ஆதலால் வீட்டிலேயே இருப்போம் பாதுகாப்பாக இருப்போம்.

രാജേശ്വരി ആർ (RAJESWARI R)
10 ജി.എച്ച്.എസ് വട്ടവട
മൂന്നാർ ഉപജില്ല
ഇടുക്കി
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കഥ

 സാങ്കേതിക പരിശോധന - Subhashthrissur തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കഥ