June 1 Pravesanolsavam

ஜூன் ஒன்றாம் தேதி காலை 10:30  மணியளவில் கோழிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நுழைவுவிழா ஏபிஜே கலையரங்கில் வைத்து சிறப்பாக நடைபெற்றது . நிகழ்வில் பள்ளியின் முதல்வர் ரீனா ஆசிரியை அவர்கள் வரவேற்புரை வழங்கினார். எஸ் எம் சி சேர்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவினை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நசிமுதீன் ஆசிரியர் அவர்களும் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியச்செயலர்  கார்த்திகேயன் ஆசிரியர் மற்றும் பிந்து ஆசிரியை போன்றோர் வாழ்த்துரை வழங்கினார். நமது கல்வி அமைச்சர் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கும் வீடியோ செய்தி காண்பிக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அனைத்து ஆசிரியர்களும் அவர்களை அறிமுகப்படுத்தும் விதத்திலான ஒரு வீடியோ பெற்றோர் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது.  நாராயணசாமி ஆசிரியர்  அவர்கள் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார். மோகன கிருஷ்ணன் ஆசிரியர் அவர்களின் நன்றியுரையோடு பள்ளி நுழைவு விழா சிறப்பாக நடைபெற்றது.